பால்டிமோர்: அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் ஆற்றுப் பாலத்தின் மீது கப்பல் மோதியதில், அந்தப் பாலம் அப்படியே விழுந்து விட்டது. இதில் பலர் ஆற்றில் விழுந்தனர்.
இந்த பாலம் விழுந்த சம்பவம் அமெரிக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சரக்குக் கப்பல் மோதியதன் காரணமாகத்தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது என்றாலும் கூட இது சாதாரண சம்பவம் அல்ல என்று அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.

பால்டிமோர் பாலம், விழுந்தது தொடர்பான வீடியோக்கள் வைரலாக பரவி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக நடைபெறும் சம்பவமாக இதை அமெரிக்கர்கள் பார்க்கவில்லை. மிகப் பெரும் அதிர்ச்சியுடன் இந்த சம்பவம் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பால்மோர் நகரில் பட்டாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய பாலம் உள்ளது. பிரிட்ஜ் மீது ஒரு பெரிய சரக்கு கப்பல் போதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில் பாலத்தின் முக்கியத் தூண் இடிந்து விழுந்தது. இதனால் பாலம் அப்படியே மொத்தமாக இடிந்து ஆற்றில் விழுந்து விட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை ஒன்றரை மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த அந்த சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்து ஆற்றில் மூழ்கியது. பாலமும் முழுமையாக இடிந்து உடைந்து விழுந்து விட்டது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விபரம் தெரியவில்லை. பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த சில பைக்குகள், கார்கள் ஆற்றில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மேரிலான்ட் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில் இந்த பாலத்தின் வழியாக பெரிய அளவில் போக்குவரத்து நடந்து வரும் நிலையில் தற்போது போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ICC ODI ranking: ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில்.. ரோஹித் சர்மா புதிய சாதனை!
வைரலானது.. ஜப்பானின் முதல் பெண் பிரதமரின் கைப்பை.. உள்ளூர் நிறுவனத்திற்கு கிராக்கி!
டெல்லியில் மீண்டும் தோல்வியடைந்த செயற்கை மழை முயற்சிகள்.. ஈரப்பதம் போதவில்லை!
ரபேல் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.. கலாம், பிரதீபா பாட்டீல் வழியில் சாதனை
மனிதன் மாறி விட்டான்!
தேவகோட்டை பள்ளியில்.. கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய மாணவர்கள்!
பணிச்சுவை!
பைந்தமிழே பயிற்று மொழி...!
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
{{comments.comment}}