பால்டிமோர்: அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் ஆற்றுப் பாலத்தின் மீது கப்பல் மோதியதில், அந்தப் பாலம் அப்படியே விழுந்து விட்டது. இதில் பலர் ஆற்றில் விழுந்தனர்.
இந்த பாலம் விழுந்த சம்பவம் அமெரிக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சரக்குக் கப்பல் மோதியதன் காரணமாகத்தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது என்றாலும் கூட இது சாதாரண சம்பவம் அல்ல என்று அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.

பால்டிமோர் பாலம், விழுந்தது தொடர்பான வீடியோக்கள் வைரலாக பரவி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக நடைபெறும் சம்பவமாக இதை அமெரிக்கர்கள் பார்க்கவில்லை. மிகப் பெரும் அதிர்ச்சியுடன் இந்த சம்பவம் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பால்மோர் நகரில் பட்டாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய பாலம் உள்ளது. பிரிட்ஜ் மீது ஒரு பெரிய சரக்கு கப்பல் போதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில் பாலத்தின் முக்கியத் தூண் இடிந்து விழுந்தது. இதனால் பாலம் அப்படியே மொத்தமாக இடிந்து ஆற்றில் விழுந்து விட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை ஒன்றரை மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த அந்த சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்து ஆற்றில் மூழ்கியது. பாலமும் முழுமையாக இடிந்து உடைந்து விழுந்து விட்டது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விபரம் தெரியவில்லை. பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த சில பைக்குகள், கார்கள் ஆற்றில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மேரிலான்ட் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில் இந்த பாலத்தின் வழியாக பெரிய அளவில் போக்குவரத்து நடந்து வரும் நிலையில் தற்போது போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
யாராகப் பிறக்க ஆசை?
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
Pooranavalli Sekar Tamil Short Story: துணிச்சலான முடிவு !
Tamil Short Story: தெர்மாஸ் பிளாஸ்க்!
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
சிந்தனைச் சிதறல்.. உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
tn result 2026 தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!
{{comments.comment}}