ஏஎஸ்பி பல்வீர் சிங் மீதான வழக்கு.. விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம்

Apr 07, 2023,03:18 PM IST
சென்னை: விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கி, மர்ம உறுப்பைத் தாக்கி கொடூரமாக நடந்து கொண்டதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்ளிட்டோர் மீது எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை நடத்துவார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்ட ஏஎஸ்பியாக இருந்தவர் பல்வீர் சிங். இவர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதிகளிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியும், மர்ம உறுப்பில் தாக்குதல் நடத்தியும்அவர் மோசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.



இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின, வீடியோக்களும் வலம் வந்தன. இதையடுத்து துணை ஆட்சித் தலைவர் விசாரணைக்கு நெல்லை மாவட்ட  கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் சேரன்மாதேவி சப் கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். அதன் பின்னர் பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை மாவட்ட  எஸ்பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சர்ச்சைக்குரிய காவல் நிலைய காவலர்கள் மணிகண்டன், பூமன், ராஜகுமாரி, இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், பெருமாள், என் சக்தி நடராஜன்,சப் இன்ஸ்பெக்டர் சந்தான குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஆனால் இந்த வழக்கில் பல்வீர் சிங் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை, தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. அவர் ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யை அப்பாவாக.. அண்ணனாக.. எங்கள் உயிராக நினைக்கிறோம்.. MLA வேல்முருகனுக்கு பதில் அளித்த மாணவி!

news

அதிசயம் ஆனால் உண்மை... நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்கு தெரியவில்லை: விஷ்வாஸ் குமார் ரமேஷ்!

news

ஜூலை 25 முதல் 100 நாள்.. மக்கள் உரிமை மீட்புப் பயணம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

news

என் மூச்சுக் காற்று இருக்கும் வரை நானே பாமக தலைவர்: டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்!

news

காமராஜர், இளைய காமராஜர்னு சொல்லாதீங்க - தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!

news

சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா?

news

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை...ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1560 உயர்வு!

news

ஈரானின் அணு சக்தி நிலையங்களைக் குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. பெரும் பதட்டம்

news

வெள்ளிக்கிழமைகளில்.. வைபவ லட்சுமி பூஜை வழிபாடு மிகவும் சிறந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்