டெல்லியை மிஞ்சிய கொடூரம்.. ஓடும் காரில் பெண் பலாத்காரம்.. 4 பேர் கும்பல் அட்டகாசம்

Mar 31, 2023,03:13 PM IST
பெங்களூரு: டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்தைப் போலவே, பெங்களூரிலும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது.

பெங்களூரு கோரமங்களாவில் தனது காதலருடன் பார்க்கில் இரவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று விடிய விடிய பலாத்காரம் செய்துள்ள செயல் மக்களை அதிர வைத்துள்ளது. அந்த நான்கு பேரையும் போலீஸார் தற்போது கைது செய்து விட்டனர்.



மார்ச் 25ம் தேதி இரவு இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. அன்றையஇரவு நடு ராத்திரி நேரத்தில் ஒரு ஜோடி கோரமங்களா தேசிய விளையாட்டுப் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒருவர், இந்த நேரத்தில் என்ன பேச்சு கிளம்புங்க என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் கிளம்பியுள்ளனர்.

அப்போது அந்த காதல் ஜோடியில் ஆண் பைக்கில் கிளம்பிச் சென்றார். அப்பெண் நடந்து போய்க் கொண்டிருந்தார். இதையடுத்து அவர்களை மிரட்டிய நபர் போன் செய்து தனது நண்பர்கள் 3 பேரை அங்கு வரவழைத்தார். பின்னர் நான்கு பேரும் சேர்ந்து அப்பெண்ணை பலவந்தப்படுத்தி காரில் ஏற்றிக் கொண்டு தப்பினர்.

இரவெல்லாம் ஓடும் காரில் வைத்து நான்கு பேரும் அப்பெண்ணை சீரழித்துள்ளனர். பின்னர் அதிகாலையில் அப்பெண்ணின் வீட்டருகே அவரை போட்டு விட்டு தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸுக்குப் புகார் செல்லவே அவர்கள் விரைவாக நடவடிக்கையில் இறங்கினர். சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆராய்ந்து தற்போது குற்றவாளிகள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் பஸ்ஸில் வைத்து நிர்பயா என்ற மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இப்போது அதே போல பெங்களூரில் நடந்திருப்பது மக்களை அதிர வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்