மும்பை: ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படாத நிலையில் அவரை ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டனாக்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை பிசிசிஐ அதிகாரி ஒருவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பை 2025 அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது பல விமர்சனங்களைத் தூண்டியது. இந்த நிலையில்தான், ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதற்கு முன்பே, ஐயர் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் உலா வந்தன.
அக்டோபர்-நவம்பரில் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படவுள்ளதாகவும், 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து, இந்த திட்டத்தை பிசிசிஐ கையில் எடுத்திருப்பதாகவும் ஒரு செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு இது புதிய செய்தி. இது குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை என்றார்.

ஷ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பை 2025 அணியில் இடம் பெறாதது பலருக்கும் ஏமாற்றம் அளித்தது. அவருக்கு பதிலாக வேறு சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இது பல விவாதங்களுக்கு வழி வகுத்தது. முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், முன்னாள் டெஸ்ட் ஆல்ரவுண்டர் ஆர். அஸ்வின் உள்ளிட்ட பலரும் ஐயர் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணமல் நடப்பதில் சிக்கல்
நோயை விட கொடிய மருந்து...ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி முதல்வர் விமர்சனம்
திருச்சி...தமிழக அரசியல் கட்சிகளின் முதல் சாய்ஸாக இருக்க என்ன காரணம்?
பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு
ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்...படத்தின் மறுஆய்வு தள்ளிவைப்பு
நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!
{{comments.comment}}