- பா.பானுமதி
எது வந்தாலும் எதிர்க்கொள்...
நல்லன எனில் ஏற்றுக்கொள்...
அல்லன எனில் தட்டிச்செல்...
எதிர் கொண்டால் தான் எல்லாம் விளங்கும்...
இல்லாவிட்டால் எப்படி துலங்கும்...
விருப்பம் இருந்தால் ஏற்றுக் கொள்...
திருப்பம் தந்தால் போற்றிக்கொள்...
பிடித்து இருந்தால் பிணைத்து கொள்
உடைத்து இருப்பினும் இணைத்து கொள்...
துடைத்து விட்டால் தூர செல்...
எதிர் கொண்டால் தான் ஏற்ற இறக்கம் புரியும்
எதிர் கொண்டால் தான் அடுத்த கட்டம் விளங்கும்
எதிர் நீச்சல் தான் கரை சேர்க்கும்
எதிர் கொண்டால் தான் எதுவும் தெரியும்...
இல்லாவிட்டால் என்று விடியும்...
வலிகள் இன்றி வழிகள் இல்லை...
சுவடுகள் இன்றி வரலாறு இல்லை...
தழும்புகள் யாவும் நீ வென்ற சாட்சி...
தன்னம்பிக்கை ஒன்றே உந்தன் மீட்சி...
இருளைக் கண்டு அஞ்சாதே -
அதுதான் வெளிச்சத்தின் வாசலை காட்டும்...
துணிந்து நில் -
உன் நிழலும் கூட உனக்கு வழி காட்டும்!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}