எதிர்க்கொள்!

Feb 04, 2026,01:02 PM IST

- பா.பானுமதி


எது வந்தாலும் எதிர்க்கொள்...

நல்லன எனில் ஏற்றுக்கொள்...

அல்லன எனில் தட்டிச்செல்...

எதிர் கொண்டால் தான் எல்லாம் விளங்கும்...

இல்லாவிட்டால் எப்படி துலங்கும்...

விருப்பம் இருந்தால் ஏற்றுக் கொள்...

திருப்பம் தந்தால் போற்றிக்கொள்...

பிடித்து இருந்தால் பிணைத்து கொள் 




உடைத்து இருப்பினும் இணைத்து கொள்...

துடைத்து விட்டால் தூர செல்...

எதிர் கொண்டால் தான் ஏற்ற இறக்கம் புரியும் 

எதிர் கொண்டால் தான் அடுத்த கட்டம் விளங்கும் 

எதிர் நீச்சல் தான் கரை சேர்க்கும் 

எதிர் கொண்டால் தான் எதுவும் தெரியும்...

இல்லாவிட்டால் என்று விடியும்...


வலிகள் இன்றி வழிகள் இல்லை... 

சுவடுகள் இன்றி வரலாறு இல்லை... 

தழும்புகள் யாவும் நீ வென்ற சாட்சி... 

தன்னம்பிக்கை ஒன்றே உந்தன் மீட்சி...


இருளைக் கண்டு அஞ்சாதே - 

அதுதான் வெளிச்சத்தின் வாசலை காட்டும்... 

துணிந்து நில் - 

உன் நிழலும் கூட உனக்கு வழி காட்டும்!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!

news

தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை

news

ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!

news

கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக

news

வயிறு பசிக்க ஆரம்பிச்சுருச்சா.. சுவையான பக்கோடா குழம்பு செய்யலாமா???

news

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!

news

புற்றுநோய்.. பயப்படாதீர்கள்.. விழிப்புணர்வோடு இருங்கள்.. நிச்சயம் வெல்லலாம்!

news

கேட்டாம் பாரு ஒரு கேள்வி...!

அதிகம் பார்க்கும் செய்திகள்