எதிர்க்கொள்!

Feb 04, 2026,01:02 PM IST

- பா.பானுமதி


எது வந்தாலும் எதிர்க்கொள்...

நல்லன எனில் ஏற்றுக்கொள்...

அல்லன எனில் தட்டிச்செல்...

எதிர் கொண்டால் தான் எல்லாம் விளங்கும்...

இல்லாவிட்டால் எப்படி துலங்கும்...

விருப்பம் இருந்தால் ஏற்றுக் கொள்...

திருப்பம் தந்தால் போற்றிக்கொள்...

பிடித்து இருந்தால் பிணைத்து கொள் 




உடைத்து இருப்பினும் இணைத்து கொள்...

துடைத்து விட்டால் தூர செல்...

எதிர் கொண்டால் தான் ஏற்ற இறக்கம் புரியும் 

எதிர் கொண்டால் தான் அடுத்த கட்டம் விளங்கும் 

எதிர் நீச்சல் தான் கரை சேர்க்கும் 

எதிர் கொண்டால் தான் எதுவும் தெரியும்...

இல்லாவிட்டால் என்று விடியும்...


வலிகள் இன்றி வழிகள் இல்லை... 

சுவடுகள் இன்றி வரலாறு இல்லை... 

தழும்புகள் யாவும் நீ வென்ற சாட்சி... 

தன்னம்பிக்கை ஒன்றே உந்தன் மீட்சி...


இருளைக் கண்டு அஞ்சாதே - 

அதுதான் வெளிச்சத்தின் வாசலை காட்டும்... 

துணிந்து நில் - 

உன் நிழலும் கூட உனக்கு வழி காட்டும்!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

news

10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ

news

புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை

news

தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு

news

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்