மதிப்பு கொடுத்தால்....!

Aug 21, 2026,11:03 AM IST

- பா.பானுமதி


உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால் உத்வேகம் உண்டாகும்

உள்ளத்திற்கு மதிப்பு கொடுத்தால் இன்ப வெள்ளம் பாய்ந்து ஓடும்


உடலுக்கு மதிப்பு கொடுத்தால் ஆரோக்கியம் நடமாடும்

உறவுகளுக்கு மதிப்பு கொடுத்தால் உற்சாகம் உண்டாகும் 


உண்மைக்கு மதிப்பு கொடுத்தால் ஒளி எங்கும் பாய்ந்து ஓடும் 

வேலைக்கு மதிப்பு கொடுத்தால் வெற்றிகள் உண்டாகும் 


நேர்த்திக்கு மதிப்பு கொடுத்தால் நயங்கள் பண்பாடும் 

நேரத்திற்கு மதிப்பு கொடுத்தால் பொன்மணிகள் விளைந்து விடும் 



மக்களுக்கு மதிப்பு கொடுத்தால் ஒற்றுமை துளிர்க்கும் 

இசைக்கு மதிப்பு கொடுத்தால் இதயம் இனிதாகும்


கலைகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் வாழ்க்கை கவியாகும்...

மதிப்பு கொடுத்து மகிழ்வோடு வாழலாம்


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்