- பா பானுமதி
அளவுக்கு மீறிய எதுவும்
ஆட்டிப்படைத்து அழிக்காமல் அடங்காது
அளவின்றி அமைந்த எதுவும்
ஆர்ப்பாட்டம் செய்யாமல் அலைக்கழிக்காமல் விடாது
ஆனந்தம் குலைத்து ஆணவத்தை வளர்த்து
அடக்கி மடக்கி போடும்
அதிசயம் போல தோன்றி
ஆளுமையை கெடுத்து அவலக் கூத்தாடும்
ஆத்திரத்தை கிளப்பும் அலைபாய வைக்கும்
பின் அடிமடியில் கை வைக்கும்

அளவின்றி இருப்பவை எல்லாமே
ஒரு நாள் அடையாளம் ஏதும் இன்றி போய்விடும்
அளவுடன் இருப்பவையே அழகுடன் இருப்பவை
அளவுடன் இருந்தாலே அமைதி கலந்திருக்கும்
அளவே அழகு அளவே அறிவு
அளவே அரண் அளவே நிம்மதி
அளவை கடந்தால் அறிவும் மழுங்கிடும்
ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாய்
அகங்காரப் பேய்க்கு ஆளாக நேரிடும்.
அள்ளி அள்ளி பருகினாலும் ஆசை அடங்காது
அளவோடு நின்றாலே வாழ்வு கசக்காது
கிடைப்பதில் திருப்தி கொள்வதே ஞானம்
கட்டுப்பாடே மனிதர்க்கு என்றும் தியானம்.
மிதமிஞ்சிய எதுவும் விஷமாக மாறும்
மிதமான வாழ்வே வரமாகத் தீரும்
அளவே ஆனந்தம்... அளவே ஆரோக்கியம்...
அளவே வாழ்வின் ஆதார ரகசியம்!
மீனாட்சி ஏன் மதுரையில் அவதரிக்க வேண்டும்.. அன்னை தடாதகை -6
ஜன்னல் வழியே நிலவுடன் ஒரு மௌன உரையாடல்
Short Story: மனமொத்த தம்பதி!
தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!
சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!
{{comments.comment}}