சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது வாரத்தில் வெளியேறப் போகும் போட்டியாளர்கள் யார் என்பதை இப்போதே ஏறக்குறைய பார்வையாளர்கள் கணித்து விட்டார்கள். இந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்றவர் என்ற அடிப்படையில் இவர் தான் வெளியேறுவார் என ஏறக்குறைய முடிவாகி விட்டது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 எதிர்பார்ப்பததை போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி சொன்னது போலவே 24 மணி நேரத்தில் முதல் போட்டியாளராக சாச்சனா வெளியேற்றப்பட்டார். பிறகு மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இவர் எதற்காக வெளியேற்றப்பட்டார், எதற்காக மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது இப்போது வரை பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமாக முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது. ஆனால் பிக்பாசின் இந்த சீசனில் முதல் வாரத்திலேயே ரவீந்தர் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இவர் குறைந்த ஓட்டுக்கள் பெற்றதால் தான் வெளியேற்றப்பட்டார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில், வெளியே வந்த ரவீந்தர், தனக்கும் விஜய் சேதுபதிக்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் மோதல்கள் இருப்பதாக போட்டி ஒன்றில் வெளிப்படையாக சொல்லி அனைவரையும் அதிர வைத்தார். இது போன்ற பல சர்ச்சைகள், குழப்பங்கள் இருந்து கொண்டே இருப்பதால் #BiggBossTamil8 என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில் அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 8 போட்டியில் இருந்து வெளியேற போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாரம் பார்வையாளர்கள் அளித்த ஓட்டுக்களின் எண்ணிக்கையின் படி பார்த்தால் ஜாக்குலின் தான் மிக குறைவான ஓட்டுக்களுடன் கடைசியில் உள்ளார். நிகழ்ச்சியின் துவக்க நாள் முதலே இவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை மட்டுமல்ல பார்வையாளர்களையும் கடுப்பேற்றி வருகிறது. இவர் எதற்கு எடுத்தாலும் அழுது சீசன் போடுவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பெண்கள் இருக்கும் பகுதியை ஆண்கள் எட்டி எட்டி பார்ப்பதாக ஜெஃப்ரி உடன் ஜாக்குலின் தொடர்ந்து வாக்குவாதம் செய்து, பெரிய பிரச்சனையாக நீண்ட நேரம் பேசியது, சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மிகவும் பிடிவாதமாக இவர் நடந்து கொள்வது அனைவரிடமும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இந்த வாரம் ஜாக்குலின் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது உண்மை தான் என்பது போல் இன்று காலை முதலே #jacqueline என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது. இவரை தொடர்ந்து மக்களிடம் குறைவான ஓட்டுக்களை பெற்றிருப்பது முத்துக்குமரன். அதனால் இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் தான் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}