சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது வாரத்தில் வெளியேறப் போகும் போட்டியாளர்கள் யார் என்பதை இப்போதே ஏறக்குறைய பார்வையாளர்கள் கணித்து விட்டார்கள். இந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்றவர் என்ற அடிப்படையில் இவர் தான் வெளியேறுவார் என ஏறக்குறைய முடிவாகி விட்டது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 எதிர்பார்ப்பததை போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி சொன்னது போலவே 24 மணி நேரத்தில் முதல் போட்டியாளராக சாச்சனா வெளியேற்றப்பட்டார். பிறகு மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இவர் எதற்காக வெளியேற்றப்பட்டார், எதற்காக மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது இப்போது வரை பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமாக முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது. ஆனால் பிக்பாசின் இந்த சீசனில் முதல் வாரத்திலேயே ரவீந்தர் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இவர் குறைந்த ஓட்டுக்கள் பெற்றதால் தான் வெளியேற்றப்பட்டார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில், வெளியே வந்த ரவீந்தர், தனக்கும் விஜய் சேதுபதிக்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் மோதல்கள் இருப்பதாக போட்டி ஒன்றில் வெளிப்படையாக சொல்லி அனைவரையும் அதிர வைத்தார். இது போன்ற பல சர்ச்சைகள், குழப்பங்கள் இருந்து கொண்டே இருப்பதால் #BiggBossTamil8 என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 8 போட்டியில் இருந்து வெளியேற போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாரம் பார்வையாளர்கள் அளித்த ஓட்டுக்களின் எண்ணிக்கையின் படி பார்த்தால் ஜாக்குலின் தான் மிக குறைவான ஓட்டுக்களுடன் கடைசியில் உள்ளார். நிகழ்ச்சியின் துவக்க நாள் முதலே இவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை மட்டுமல்ல பார்வையாளர்களையும் கடுப்பேற்றி வருகிறது. இவர் எதற்கு எடுத்தாலும் அழுது சீசன் போடுவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பெண்கள் இருக்கும் பகுதியை ஆண்கள் எட்டி எட்டி பார்ப்பதாக ஜெஃப்ரி உடன் ஜாக்குலின் தொடர்ந்து வாக்குவாதம் செய்து, பெரிய பிரச்சனையாக நீண்ட நேரம் பேசியது, சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மிகவும் பிடிவாதமாக இவர் நடந்து கொள்வது அனைவரிடமும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இந்த வாரம் ஜாக்குலின் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது உண்மை தான் என்பது போல் இன்று காலை முதலே #jacqueline என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது. இவரை தொடர்ந்து மக்களிடம் குறைவான ஓட்டுக்களை பெற்றிருப்பது முத்துக்குமரன். அதனால் இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் தான் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Poem on Life: வாழ்க்கை!
இணையத்தில் செம டிரெண்டிங்.. பரபரக்கும் ‘You+Me - Against the World’ திரைப்பட கிளைமேக்ஸ்!
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
{{comments.comment}}