பிக்பாஸ் தமிழ் சீசன் 8: ரொம்ப கம்மியான ஓட்டு.. அப்ப இந்த வாரம் வெளியேற போவது இவர் தானா?

Oct 16, 2024,01:22 PM IST

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது வாரத்தில் வெளியேறப் போகும் போட்டியாளர்கள் யார் என்பதை இப்போதே ஏறக்குறைய பார்வையாளர்கள் கணித்து விட்டார்கள். இந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்றவர் என்ற அடிப்படையில் இவர் தான் வெளியேறுவார் என ஏறக்குறைய முடிவாகி விட்டது.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 எதிர்பார்ப்பததை போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி சொன்னது போலவே 24 மணி நேரத்தில் முதல் போட்டியாளராக சாச்சனா வெளியேற்றப்பட்டார். பிறகு மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இவர் எதற்காக வெளியேற்றப்பட்டார், எதற்காக மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது இப்போது வரை பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


வழக்கமாக முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது. ஆனால் பிக்பாசின் இந்த சீசனில் முதல் வாரத்திலேயே ரவீந்தர் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இவர் குறைந்த ஓட்டுக்கள் பெற்றதால் தான் வெளியேற்றப்பட்டார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில், வெளியே வந்த ரவீந்தர், தனக்கும் விஜய் சேதுபதிக்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் மோதல்கள் இருப்பதாக போட்டி ஒன்றில் வெளிப்படையாக சொல்லி அனைவரையும் அதிர வைத்தார். இது போன்ற பல சர்ச்சைகள், குழப்பங்கள் இருந்து கொண்டே இருப்பதால் #BiggBossTamil8 என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.




இந்நிலையில் அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 8 போட்டியில் இருந்து வெளியேற போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாரம் பார்வையாளர்கள் அளித்த ஓட்டுக்களின் எண்ணிக்கையின் படி பார்த்தால் ஜாக்குலின் தான் மிக குறைவான ஓட்டுக்களுடன் கடைசியில் உள்ளார். நிகழ்ச்சியின் துவக்க நாள் முதலே இவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை மட்டுமல்ல பார்வையாளர்களையும் கடுப்பேற்றி வருகிறது. இவர் எதற்கு எடுத்தாலும் அழுது சீசன் போடுவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 


பெண்கள் இருக்கும் பகுதியை ஆண்கள் எட்டி எட்டி பார்ப்பதாக ஜெஃப்ரி உடன் ஜாக்குலின் தொடர்ந்து வாக்குவாதம் செய்து, பெரிய பிரச்சனையாக நீண்ட நேரம் பேசியது, சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மிகவும் பிடிவாதமாக இவர் நடந்து கொள்வது அனைவரிடமும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இந்த வாரம் ஜாக்குலின் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இது உண்மை தான் என்பது போல் இன்று காலை முதலே  #jacqueline என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது. இவரை தொடர்ந்து மக்களிடம் குறைவான ஓட்டுக்களை பெற்றிருப்பது முத்துக்குமரன். அதனால் இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் தான் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்