கோவை : கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மாநில பாஜக தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை வெளியிட்டார். இதில் 100 வாக்குறுதிகள் கோவை தொகுதிக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு லோக்சபா தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டு விட்ட நிலையில், தற்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை இதனை வெளியிட்டுள்ளார்.

கோவைக்கான பாஜக.,வின் வாக்குறுதிகள் :
* கோவையில் என்ஐஏ, போதை தடுப்பு பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்படும்.
* கோவையில் உள்ள 6 சட்டசபை உறுப்பினர் அலுவலகங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் மையங்கள் அமைக்கப்படும்.
* நாடு முழுவதிலும் உள்ள ஆன்மிக தலங்களுக்கு கோவையில் இருந்து 10 ரயில்கள் இயக்கப்படும்.
* கோவையில் காமராஜர் பெயரில் நடமாடும் உணவகங்கள் அமைக்கப்படும்.
* கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை தணிக்கை செய்யப்படும்.
* பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை.
* பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* சவரணம்பட்டியில் பொழுதுபோக்கிற்காக பொதுப்பூங்கா.
* கோவையில் ஐஐஎம் கொண்டு வர நடவடிக்கை
* 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும்.
என்பவை உள்ளிட்ட 100 வாக்குறுதிகளை அண்ணாமலை வெளியிட்டார். இந்த 100 வாக்குறுதிகளும் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். அண்ணாமலை 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக சொல்லப்படும் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தான் 10 மணிக்கு மேல் பேசிய வீடியோ ஆதாரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள் என்றார்.
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு எப்போதுமே ஒத்துவராது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது : செல்வப்பெருந்தகை உறுதி
என்னடா இது விசிலுக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து தடை செய்யப்படுவதால் சலசலப்பு!
தேமுதிகவுடன் இதுவரை பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு!
2 சூப்பர் ஓவர்.. ஒரு சூப்பர் மேட்ச்.. போராடிய ஆப்கானிஸ்தான்.. 4 ரன்களில் வென்ற தெ. ஆப்பிரிக்கா
"இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டீர்கள்": மக்களவையில் ராகுல் காந்தியின் ஆவேச உரை
மத்திய அரசின் திட்டங்களில் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்கிறது: அண்ணாமலை
நாடாளுமன்ற மரபுகளை மீறுகிறார் ராகுல் காந்தி...கிரண் ரிஜிஜு கடும் விமர்சனம்
{{comments.comment}}