கோவை : கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மாநில பாஜக தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை வெளியிட்டார். இதில் 100 வாக்குறுதிகள் கோவை தொகுதிக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு லோக்சபா தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டு விட்ட நிலையில், தற்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை இதனை வெளியிட்டுள்ளார்.

கோவைக்கான பாஜக.,வின் வாக்குறுதிகள் :
* கோவையில் என்ஐஏ, போதை தடுப்பு பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்படும்.
* கோவையில் உள்ள 6 சட்டசபை உறுப்பினர் அலுவலகங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் மையங்கள் அமைக்கப்படும்.
* நாடு முழுவதிலும் உள்ள ஆன்மிக தலங்களுக்கு கோவையில் இருந்து 10 ரயில்கள் இயக்கப்படும்.
* கோவையில் காமராஜர் பெயரில் நடமாடும் உணவகங்கள் அமைக்கப்படும்.
* கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை தணிக்கை செய்யப்படும்.
* பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை.
* பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* சவரணம்பட்டியில் பொழுதுபோக்கிற்காக பொதுப்பூங்கா.
* கோவையில் ஐஐஎம் கொண்டு வர நடவடிக்கை
* 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும்.
என்பவை உள்ளிட்ட 100 வாக்குறுதிகளை அண்ணாமலை வெளியிட்டார். இந்த 100 வாக்குறுதிகளும் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். அண்ணாமலை 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக சொல்லப்படும் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தான் 10 மணிக்கு மேல் பேசிய வீடியோ ஆதாரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள் என்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}