சென்னை: தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது என்று அயோத்தில் பிரதமர் மோடி கொடியேற்றியதற்கு நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், இன்று உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள குழந்தை ராமர் கோவிலின் 161 அடி கோபுரத்தின் மீது அமைந்துள்ள 30 அடி உயரக் கம்பத்தில், பகவான் ஸ்ரீ ராமபிரான் பிறந்த சூரிய குலத்தைக் குறிக்கும் வகையில் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சூரியச்சின்னம் பொருந்திய தர்மக் கொடியை ஏற்றிய தருணங்கள், அனைத்து இந்துக்களையும் உணர்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டன.

எத்தனை போராட்டங்கள்? எத்தனை வலிகள்? எத்தனை கண்ணீர் துளிகள்? எத்தனை உயிர் பலிகள்? அத்தனைக்கும் இன்று பதில் கிடைத்து விட்டதாகவே தோன்றுகிறது. இந்துக்களின் பல நூற்றாண்டுகாலக் கனவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ப்பித்து வரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும், எத்தனை முறை வாழ்த்துகள் சொன்னாலும் போதாது.
இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்பதற்கேற்ப, 1990 ஆம் ஆண்டு ராம ரத யாத்திரையில் துவங்கிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் இந்த வேள்விப் பயணம், இன்று பகவான் ஸ்ரீ ராமபிரான் பிறந்த அயோத்தி மண்ணில் அவருக்கான ஆலயத்தை எழுப்பி அதன்மீது தர்மக் கொடியேற்றும் வைபோகத்தில் வந்து நிற்கிறது. இப்பேற்பட்ட பாக்கியவான் நமது நாட்டை ஆள்வது நம் முன்னோர்கள் செய்த பெரும் பேறு என்று தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்?.. டீலிங்கில் வெற்றி பெற போவது யார்?
தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது: நயினார் நாகேந்திரன் பெருமிதம்!
நவ., 27ம் தேதி புயல் உருவாகாது: வானிலை மையம் புதிய தகவல்.. ஆகவே மக்களே.. ரிலாக்ஸா இருங்க!
தவெக.வில் இணைகிறாரா கே.ஏ.செங்கோட்டையன்? .. திடீர் பரபரப்பு.. பின்னணியில் என்ன நடக்குது?
எத்தியோப்பியாவில் வெடித்த .. ஹெய்லி குபி எரிமலை.. இந்தியா வரை பாதிப்பு!
ஆண் பாவம் பொல்லாதது.. டோட்டல் டீமும் செம ஹேப்பியாம்.. என்ன காரணம் தெரியுமா?
திமுக அமைச்சர்கள் அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்: அண்ணாமலை!
அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார் பிரதமர் நரேந்திர மோடி
{{comments.comment}}