சென்னை: நொடிக்கு நொடி திரில்லரான கதைக்களத்தில் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் பிளாக். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறதாம்.

தமிழ் சினிமாவில் திரில்லர் படங்கள் தற்போது தனித்துவம் பெற்று வருகின்றன. அதிலும் பரபரப்பான திரில்லர் கலந்த திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மக்கள் இப்படங்களை கொண்டாடியும் வருகின்றனர். அந்த வரிசையில் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் வித்யாசமான திரில்லர் கதையாக பிளாக் படம் உருவாகி வருகிறது. இந்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன், இறுகப்பற்று போன்ற படங்களை தயாரித்துள்ளது.
இப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியிலேயே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு சூப்பர் ஹிட் கொடுத்தது. அதேபோல் பிளாக் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை கே ஜி பாலசுப்ரமணியன் இயக்கியுள்ளார். சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பிளாக் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்த நிலையில் தற்போது படம் வெளியீடு குறித்த வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்து இயக்குனர் கே.ஜி பாலசுப்பிரமணி கூறுகையில், ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவம். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம் நொடிக்கு நொடி திர்லர் ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்கப்படும் அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும் இதை பிறரிடம் சொன்னால்.
நம்ப முடியாத வகையிலும் இருக்கும் அப்படிப்பட்ட கதை தான் பிளாக். நம்மை சூழ்ந்திருக்கும் இருளை பிளாக் என்று சொல்லலாம் யாரும் நம்மை எளிதில் புரிந்து கொள்ளாத அளவுக்கு நம்முடைய இன்னொரு கருப்பு பக்கத்தை காட்டிக்கொள்ளாமல் இருப்பதையும் பிளாக் என்று சொல்லலாம். இதுவே இக்கதைக்கு பொருந்தும் எனக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}