பி.எஸ்.என்.எல். செம அதிரடி.. குறைந்த விலையில்.. புதிய ரீஜார்ஜ் திட்டம்.. மகிழ்ச்சியில் மக்கள்..!

Jul 02, 2024,07:59 PM IST

சென்னை: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ்  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் குஷியாகி உள்ளனர்.


நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ, வோடபோன், ஏர்டெல் ஆகியவை  முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதில் ஜியோ நாட்டிலேயே நம்பர் ஒன் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு அடுத்து ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.




இந்த நிறுவனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்படவுள்ளது எனவும், இந்த புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஜியோ, வோடபோன், ஏர்டெல், நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன கட்டண உயர்வு நாளை முதல் அமல்  வர உள்ளன. வோடபோன் நிறுவனத்தின் கட்டண உயர்வு ஜூலை 4 முதல் அமலுக்கு வர உள்ளன. 


இதற்கிடையே அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஏர்டெல், ஜியோ, வோடபோன், நிறுவனங்களை விட குறைவான ரீசார்ஜ் திட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளது. இது மக்களுக்கு குஷியைக் கொடுத்துள்ளது.


45 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் ரூபாய் 249 கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க் நிறுவனத்திற்கும் இலவச அன்லிமிடெட் மொபைல் நெட்வொர்க் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நாளைக்கு இரண்டு ஜிபி டேட்டா பயன்படுத்தும் விதமாக 90 ஜிபி டேட்டாவும் நாளொன்றுக்கு இலவச மெசேஜ் அனுப்பும் வசதியையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்