பி.எஸ்.என்.எல். செம அதிரடி.. குறைந்த விலையில்.. புதிய ரீஜார்ஜ் திட்டம்.. மகிழ்ச்சியில் மக்கள்..!

Jul 02, 2024,07:59 PM IST

சென்னை: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ்  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் குஷியாகி உள்ளனர்.


நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ, வோடபோன், ஏர்டெல் ஆகியவை  முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதில் ஜியோ நாட்டிலேயே நம்பர் ஒன் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு அடுத்து ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.




இந்த நிறுவனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்படவுள்ளது எனவும், இந்த புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஜியோ, வோடபோன், ஏர்டெல், நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன கட்டண உயர்வு நாளை முதல் அமல்  வர உள்ளன. வோடபோன் நிறுவனத்தின் கட்டண உயர்வு ஜூலை 4 முதல் அமலுக்கு வர உள்ளன. 


இதற்கிடையே அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஏர்டெல், ஜியோ, வோடபோன், நிறுவனங்களை விட குறைவான ரீசார்ஜ் திட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளது. இது மக்களுக்கு குஷியைக் கொடுத்துள்ளது.


45 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் ரூபாய் 249 கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க் நிறுவனத்திற்கும் இலவச அன்லிமிடெட் மொபைல் நெட்வொர்க் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நாளைக்கு இரண்டு ஜிபி டேட்டா பயன்படுத்தும் விதமாக 90 ஜிபி டேட்டாவும் நாளொன்றுக்கு இலவச மெசேஜ் அனுப்பும் வசதியையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்