சென்னை: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் குஷியாகி உள்ளனர்.
நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ, வோடபோன், ஏர்டெல் ஆகியவை முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதில் ஜியோ நாட்டிலேயே நம்பர் ஒன் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு அடுத்து ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்படவுள்ளது எனவும், இந்த புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஜியோ, வோடபோன், ஏர்டெல், நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன கட்டண உயர்வு நாளை முதல் அமல் வர உள்ளன. வோடபோன் நிறுவனத்தின் கட்டண உயர்வு ஜூலை 4 முதல் அமலுக்கு வர உள்ளன.
இதற்கிடையே அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஏர்டெல், ஜியோ, வோடபோன், நிறுவனங்களை விட குறைவான ரீசார்ஜ் திட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளது. இது மக்களுக்கு குஷியைக் கொடுத்துள்ளது.
45 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் ரூபாய் 249 கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க் நிறுவனத்திற்கும் இலவச அன்லிமிடெட் மொபைல் நெட்வொர்க் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நாளைக்கு இரண்டு ஜிபி டேட்டா பயன்படுத்தும் விதமாக 90 ஜிபி டேட்டாவும் நாளொன்றுக்கு இலவச மெசேஜ் அனுப்பும் வசதியையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
விஜய்யை அப்பாவாக.. அண்ணனாக.. எங்கள் உயிராக நினைக்கிறோம்.. MLA வேல்முருகனுக்கு பதில் அளித்த மாணவி!
அதிசயம் ஆனால் உண்மை... நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்கு தெரியவில்லை: விஷ்வாஸ் குமார் ரமேஷ்!
ஜூலை 25 முதல் 100 நாள்.. மக்கள் உரிமை மீட்புப் பயணம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
என் மூச்சுக் காற்று இருக்கும் வரை நானே பாமக தலைவர்: டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்!
காமராஜர், இளைய காமராஜர்னு சொல்லாதீங்க - தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!
சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா?
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை...ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1560 உயர்வு!
ஈரானின் அணு சக்தி நிலையங்களைக் குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. பெரும் பதட்டம்
வெள்ளிக்கிழமைகளில்.. வைபவ லட்சுமி பூஜை வழிபாடு மிகவும் சிறந்தது!
{{comments.comment}}