டில்லி : எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, வெளிநடப்பிற்கு இடையே மத்திய பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2025-2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் உரையை லோக்சபாவில் வாசித்து வருகிறார் நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன். பாஜக அரசின் சாதனை பட்டிலுடன் தன்னுடைய பட்ஜெட் உரையை அவர் துவக்கினார். ஆனால் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் உரை துவங்கியதுமே கடும் அமளியில் ஈடுபட துவங்கினர்.
பணவீக்கம், வேலையின்மை, பிரயாக்ராஜ் கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து, அதற்கு பதிலளித்த பிறகு பட்ஜெட் துறையை துவக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கூச்சலிட துவங்கின.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மத்திய பட்ஜெட் உரையை துவங்கி, வாசிக்க துவங்கினார் நிர்மலா சீதாராமன். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன.
மாற்றத்திற்கான பட்ஜெட் தாக்கலை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
தெலுங்குக் கவிதை ஒன்றை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையைத் தொடங்கி தற்போது வாசித்து வருகிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்
மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?
சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு
{{comments.comment}}