டில்லி : எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, வெளிநடப்பிற்கு இடையே மத்திய பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2025-2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் உரையை லோக்சபாவில் வாசித்து வருகிறார் நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன். பாஜக அரசின் சாதனை பட்டிலுடன் தன்னுடைய பட்ஜெட் உரையை அவர் துவக்கினார். ஆனால் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் உரை துவங்கியதுமே கடும் அமளியில் ஈடுபட துவங்கினர்.
பணவீக்கம், வேலையின்மை, பிரயாக்ராஜ் கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து, அதற்கு பதிலளித்த பிறகு பட்ஜெட் துறையை துவக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கூச்சலிட துவங்கின.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மத்திய பட்ஜெட் உரையை துவங்கி, வாசிக்க துவங்கினார் நிர்மலா சீதாராமன். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன.
மாற்றத்திற்கான பட்ஜெட் தாக்கலை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
தெலுங்குக் கவிதை ஒன்றை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையைத் தொடங்கி தற்போது வாசித்து வருகிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!
ரஜினியை சந்தித்த சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு... இணையத்தில் வைரல்!
2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்
வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!
வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!
{{comments.comment}}