டில்லி : எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, வெளிநடப்பிற்கு இடையே மத்திய பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2025-2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் உரையை லோக்சபாவில் வாசித்து வருகிறார் நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன். பாஜக அரசின் சாதனை பட்டிலுடன் தன்னுடைய பட்ஜெட் உரையை அவர் துவக்கினார். ஆனால் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் உரை துவங்கியதுமே கடும் அமளியில் ஈடுபட துவங்கினர்.
பணவீக்கம், வேலையின்மை, பிரயாக்ராஜ் கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து, அதற்கு பதிலளித்த பிறகு பட்ஜெட் துறையை துவக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கூச்சலிட துவங்கின.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மத்திய பட்ஜெட் உரையை துவங்கி, வாசிக்க துவங்கினார் நிர்மலா சீதாராமன். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன.
மாற்றத்திற்கான பட்ஜெட் தாக்கலை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
தெலுங்குக் கவிதை ஒன்றை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையைத் தொடங்கி தற்போது வாசித்து வருகிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்
Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!
சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
{{comments.comment}}