டில்லி : மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கி விட்டது. நாளை காலை 2025-2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்ய உள்ளார். இதில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் வருமா என்பது மாத சம்பளதாரர்களின் எதிர்பார்ப்பாகவும், எந்தெந்த பொருட்களின் விலை குறையும் என்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.
நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் சாமானிய மற்றும் நடுத்தர மக்களை திருப்திபடுத்தும் விதமாக பல முக்கிய அறிவிப்புகள், விலை குறைப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி எந்தெந்த பொருட்களின் விலை குறையவும், எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை தெரிந்து கொள்ளலாம்.
விலை குறையும் வாய்ப்புள்ள பொருட்கள் :
*ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கேட்ஜெட்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்பதால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
* எலக்ட்ரானிக் வாகன பயன்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக அவற்றின் மீதான மானியம் அல்லது வரி சலுகை வரலாம் என்பதால் இதன் விலையும் குறையலாம்.
* கேன்சர், அரிய வகை நோய்களுக்கான மருந்துகள் போன்ற உயிர் காக்கும் மருந்துக்களின் மீதான வரி விலக்கு அளிக்கப்படலாம்
* டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கார்மென்ட்ஸ் - உற்பத்தி செல்வுகளை குறைப்பதற்காக இவற்றின் மீதான ஆதார விலை மற்றும் விலை குறைப்பை கொண்டு வரலாம்.
* வீட்டு உபயோகப் பொருட்கள் மீதான எலக்ட்ரானிக் வரிகள் குறைக்கப்பட்டால் வாஷிங் மெஷின், ஏசி, ஃபிரிட்ஜ் ஆகியவற்றின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது.
* சோலார் பேனல் - இயற்கை சக்திகளை பயன்படுத்தும் முறைகளுக்கு மாறுவதை ஊக்குவிப்பதற்காக சோலார் பேனல்கள், மறுசுழற்சி மூலம் சக்திகளை பயன்படுத்தும் முறைகளுக்கான கருவிகளின் விலைகள் குறையலாம்.
* அனைவருக்கும் வீடு என்ற அரசின் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்காக சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் வீட்டு கடன்கள் மீது வரிச் சலுகை அல்லது வரி குறைப்பு செய்யப்பட்டால் வீடு கடன்கள் மீதான வரி குறைய வாய்ப்புள்ளது.
விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ள பொருட்கள் :
* சொகுசு வாகனங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி அதிகரிக்கப்படலாம்.
* வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்கள், ஆட்டோமெபைல்கள் மீதான சுங்க வரி உயரலாம்.
* புகையிலை, சிகரெட் போன்ற ஆரோக்கியத்தை பாதிக்கும் பொருட்களின் மீதான விலைகள் உயர்த்தப்படலாம்.
* மது பானங்கள் - மதுபான பயன்பாட்டினை குறைப்பதற்காக அவற்றின் மீதான கலால் வரி உயர்த்தப்படலாம்.
* தங்கம், வெள்ளி - வெளிநாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்படும் விலை உயர்ந்த உலோகங்கள் மீதான வரி உயர்த்தப்படலாம்.
* விமான பயணம் - விமான பயன்பாட்டிற்கான எரிபொருட்களின் விலை உயர்த்தப்படலாம் என்பதால் விமான டிக்கெட்களின் விலை உயர்த்தப்படலாம்.
* தொலைத்தொடர்பு நிறுவனங்களில் உள்கட்டமைப்பு விலைகள் உயர்த்தப்படலாம் என்பதால் மொபைல் ரீசார்ஜ் பிளான்கள் மற்றும் இன்டர்நெட் சேவைகளுக்கான விலை உயரலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்
Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!
சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
{{comments.comment}}