மத்திய பட்ஜெட் 2025 : எந்த பொருட்களின் விலை குறைய-உயர வாய்ப்பு.. சர்பிரைஸ் தருவாரா அமைச்சர் நிர்மலா?

Jan 31, 2025,06:53 PM IST

டில்லி : மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கி விட்டது. நாளை காலை 2025-2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்ய உள்ளார். இதில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் வருமா என்பது மாத சம்பளதாரர்களின் எதிர்பார்ப்பாகவும், எந்தெந்த பொருட்களின் விலை குறையும் என்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.


நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் சாமானிய மற்றும் நடுத்தர மக்களை திருப்திபடுத்தும் விதமாக பல முக்கிய அறிவிப்புகள், விலை குறைப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி எந்தெந்த பொருட்களின் விலை குறையவும், எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை தெரிந்து கொள்ளலாம்.


விலை குறையும் வாய்ப்புள்ள  பொருட்கள் :




*ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கேட்ஜெட்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்பதால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.

* எலக்ட்ரானிக் வாகன பயன்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக அவற்றின் மீதான மானியம் அல்லது வரி சலுகை வரலாம் என்பதால் இதன் விலையும் குறையலாம்.

* கேன்சர், அரிய வகை நோய்களுக்கான மருந்துகள் போன்ற உயிர் காக்கும் மருந்துக்களின் மீதான வரி விலக்கு அளிக்கப்படலாம்

* டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கார்மென்ட்ஸ் - உற்பத்தி செல்வுகளை குறைப்பதற்காக இவற்றின் மீதான ஆதார விலை மற்றும் விலை குறைப்பை கொண்டு வரலாம்.

* வீட்டு உபயோகப் பொருட்கள் மீதான எலக்ட்ரானிக் வரிகள் குறைக்கப்பட்டால் வாஷிங் மெஷின், ஏசி, ஃபிரிட்ஜ் ஆகியவற்றின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது.

* சோலார் பேனல் - இயற்கை சக்திகளை பயன்படுத்தும் முறைகளுக்கு மாறுவதை ஊக்குவிப்பதற்காக சோலார் பேனல்கள், மறுசுழற்சி மூலம் சக்திகளை பயன்படுத்தும் முறைகளுக்கான கருவிகளின் விலைகள் குறையலாம்.

* அனைவருக்கும் வீடு என்ற அரசின் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்காக சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் வீட்டு கடன்கள் மீது வரிச் சலுகை அல்லது வரி குறைப்பு செய்யப்பட்டால் வீடு கடன்கள் மீதான வரி குறைய வாய்ப்புள்ளது.


விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ள பொருட்கள் :


* சொகுசு வாகனங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி அதிகரிக்கப்படலாம்.

* வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்கள், ஆட்டோமெபைல்கள் மீதான சுங்க வரி உயரலாம்.

* புகையிலை, சிகரெட் போன்ற ஆரோக்கியத்தை பாதிக்கும் பொருட்களின் மீதான விலைகள் உயர்த்தப்படலாம்.

* மது பானங்கள் - மதுபான பயன்பாட்டினை குறைப்பதற்காக அவற்றின் மீதான கலால் வரி உயர்த்தப்படலாம்.

* தங்கம், வெள்ளி - வெளிநாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்படும் விலை உயர்ந்த உலோகங்கள் மீதான வரி உயர்த்தப்படலாம்.

* விமான பயணம் - விமான பயன்பாட்டிற்கான எரிபொருட்களின் விலை உயர்த்தப்படலாம் என்பதால் விமான டிக்கெட்களின் விலை உயர்த்தப்படலாம்.

* தொலைத்தொடர்பு நிறுவனங்களில் உள்கட்டமைப்பு விலைகள் உயர்த்தப்படலாம் என்பதால் மொபைல் ரீசார்ஜ் பிளான்கள் மற்றும் இன்டர்நெட் சேவைகளுக்கான விலை உயரலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

news

தமிழகத்தை சர்வதேச அளவில் உயர்த்தும் பட்ஜெட்: காங்கிரஸ் கமிட்டி புகழாரம்!

news

உருப்படியா ஒன்னும் இல்ல, இது ஒரு ஏமாற்று பட்ஜெட்: பட்ஜெட்டை விளாசிய எடப்பாடி பழனிசாமி

news

பட்ஜெட் 2026: மக்களின் நம்பிக்கையைத் தகர்த்த திமுகவின் 'கடைசி' ஏமாற்று வேலை: அண்ணாமலை

news

தமிழகத்தில் பிப்ரவரி 21 முதல் 24ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

வேலூரில் பிப்ரவரி 23-ல் தவெகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!

news

மதுரை அரசியலில் திடீர் பரபரப்பு.. அதிமுகவுக்குத் தாவி வந்தார் அழகிரி ஆதரவாளரான மன்னன்!

news

எடப்பாடி பழனிச்சாமியுடன் ராமதாஸ் தரப்பு பாமக எம்.எல்.ஏ அருள் திடீர் சந்திப்பு!

news

2026-27 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அதிகம் பார்க்கும் செய்திகள்