ஹீலியம் கேஸை நுகர்ந்து.. சிஏ மாணவர் எடுத்த விபரீத முடிவு.. டெல்லியை உலுக்கிய சம்பவம்

Jul 30, 2025,12:43 PM IST

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த 25 வயது சிஏ மாணவர் விபரீதமான முறையில் ஹீலியம் கேஸை நுகர்ந்து தனது முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் டெல்லியை அதிர வைத்துள்ளது.


டெல்லியில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது முடிவு குறித்து குறிப்பு ஒன்றையும் அவர் எழுதி வைத்திருந்தார். தனது சமூக வலைதளப் பக்கத்திலும் இதுகுறித்து அவர் எழுதி வைத்துள்ளார்.


டெல்லியில் இப்படி ஒரு விபரீதமான முறையிலான தற்கொலைச் சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.  கோல் மார்க்கெட் பகுதியில் உள்ள ஏர்பிஎன்பி என்ற விடுதியில்தான் அந்த மாணவர் தங்கியிருந்தார். மரணத்தைத் தேடிக் கொண்ட மாணவரின் பெயர் தீரஜ் கன்சால். தனது அறையை விட்டு அவர் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர்கல் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் வந்து அறைக் கதவை உடைத்து உள்ளே போய்ப் பார்த்தபோதுதான் விபரீதம் தெரிய வந்தது.




ஆசை படத்தில் வருவது போல முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக் கொண்டு ஹீலியம் காஸ் சிலிண்டரில் உள்ள டியூபை தனது வாய்க்குள் நுழைத்துக் கொண்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் தீரஜ் கன்சால்.  தனது முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று பேஸ்புக்கில் எழுதி வைத்திருந்தார் தீரஜ். மேலும், எனது வாழ்க்கையில் நான் சந்தித்த ஒவ்வொருவரும் இரக்கமானவர்கள். நல்லவர்கள். எனவே எனது மரணத்துக்காக யாரையும் விசாரணை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்த வேண்டாம் என்று அவர் எழுதியிருந்தார். தனது உடல் உறுப்புகளையும் தானமாக கொடுத்து விடுமாறும் தனது பணத்தை ஆதரவற்றோருக்காக செலவிடுமாறும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.


தீரஜ் சில காலமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை 2002ம் ஆண்டே இறந்து விட்டார். தாயார் மறுமணம் புரிந்து கொண்டு போய் விட்டார். தீரஜை அவரது தாத்தா பாட்டிதான் வளர்த்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

கல்லறை தேடுகிறது!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை குறைவு.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

Red Alert: மும்பை, தானேயில்.. வெளுத்து வாங்கும் கன மழை.. மக்களே உஷாரா இருங்க!

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

என் நினைவில் ஒரு காதல் அலை.. கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி (2)

news

உலகின் முன்னோடி முதலமைச்சர்கள் மூவர்.. சிவ அறஞானிகள்.. யார் என்று தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 15, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்