ஹீலியம் கேஸை நுகர்ந்து.. சிஏ மாணவர் எடுத்த விபரீத முடிவு.. டெல்லியை உலுக்கிய சம்பவம்

Jul 30, 2025,12:43 PM IST

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த 25 வயது சிஏ மாணவர் விபரீதமான முறையில் ஹீலியம் கேஸை நுகர்ந்து தனது முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் டெல்லியை அதிர வைத்துள்ளது.


டெல்லியில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது முடிவு குறித்து குறிப்பு ஒன்றையும் அவர் எழுதி வைத்திருந்தார். தனது சமூக வலைதளப் பக்கத்திலும் இதுகுறித்து அவர் எழுதி வைத்துள்ளார்.


டெல்லியில் இப்படி ஒரு விபரீதமான முறையிலான தற்கொலைச் சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.  கோல் மார்க்கெட் பகுதியில் உள்ள ஏர்பிஎன்பி என்ற விடுதியில்தான் அந்த மாணவர் தங்கியிருந்தார். மரணத்தைத் தேடிக் கொண்ட மாணவரின் பெயர் தீரஜ் கன்சால். தனது அறையை விட்டு அவர் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர்கல் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் வந்து அறைக் கதவை உடைத்து உள்ளே போய்ப் பார்த்தபோதுதான் விபரீதம் தெரிய வந்தது.




ஆசை படத்தில் வருவது போல முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக் கொண்டு ஹீலியம் காஸ் சிலிண்டரில் உள்ள டியூபை தனது வாய்க்குள் நுழைத்துக் கொண்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் தீரஜ் கன்சால்.  தனது முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று பேஸ்புக்கில் எழுதி வைத்திருந்தார் தீரஜ். மேலும், எனது வாழ்க்கையில் நான் சந்தித்த ஒவ்வொருவரும் இரக்கமானவர்கள். நல்லவர்கள். எனவே எனது மரணத்துக்காக யாரையும் விசாரணை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்த வேண்டாம் என்று அவர் எழுதியிருந்தார். தனது உடல் உறுப்புகளையும் தானமாக கொடுத்து விடுமாறும் தனது பணத்தை ஆதரவற்றோருக்காக செலவிடுமாறும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.


தீரஜ் சில காலமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை 2002ம் ஆண்டே இறந்து விட்டார். தாயார் மறுமணம் புரிந்து கொண்டு போய் விட்டார். தீரஜை அவரது தாத்தா பாட்டிதான் வளர்த்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்

news

திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?

news

செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி

news

வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு

news

பாமக யாருக்கு? அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் வழங்கி வழக்கு முடித்து வைப்பு

news

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்.பி., திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்

news

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி

news

ஜனநாயகன் படத்திற்கு புதிய சிக்கல்: மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்