ஹீலியம் கேஸை நுகர்ந்து.. சிஏ மாணவர் எடுத்த விபரீத முடிவு.. டெல்லியை உலுக்கிய சம்பவம்

Jul 30, 2025,12:43 PM IST

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த 25 வயது சிஏ மாணவர் விபரீதமான முறையில் ஹீலியம் கேஸை நுகர்ந்து தனது முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் டெல்லியை அதிர வைத்துள்ளது.


டெல்லியில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது முடிவு குறித்து குறிப்பு ஒன்றையும் அவர் எழுதி வைத்திருந்தார். தனது சமூக வலைதளப் பக்கத்திலும் இதுகுறித்து அவர் எழுதி வைத்துள்ளார்.


டெல்லியில் இப்படி ஒரு விபரீதமான முறையிலான தற்கொலைச் சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.  கோல் மார்க்கெட் பகுதியில் உள்ள ஏர்பிஎன்பி என்ற விடுதியில்தான் அந்த மாணவர் தங்கியிருந்தார். மரணத்தைத் தேடிக் கொண்ட மாணவரின் பெயர் தீரஜ் கன்சால். தனது அறையை விட்டு அவர் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர்கல் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் வந்து அறைக் கதவை உடைத்து உள்ளே போய்ப் பார்த்தபோதுதான் விபரீதம் தெரிய வந்தது.




ஆசை படத்தில் வருவது போல முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக் கொண்டு ஹீலியம் காஸ் சிலிண்டரில் உள்ள டியூபை தனது வாய்க்குள் நுழைத்துக் கொண்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் தீரஜ் கன்சால்.  தனது முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று பேஸ்புக்கில் எழுதி வைத்திருந்தார் தீரஜ். மேலும், எனது வாழ்க்கையில் நான் சந்தித்த ஒவ்வொருவரும் இரக்கமானவர்கள். நல்லவர்கள். எனவே எனது மரணத்துக்காக யாரையும் விசாரணை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்த வேண்டாம் என்று அவர் எழுதியிருந்தார். தனது உடல் உறுப்புகளையும் தானமாக கொடுத்து விடுமாறும் தனது பணத்தை ஆதரவற்றோருக்காக செலவிடுமாறும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.


தீரஜ் சில காலமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை 2002ம் ஆண்டே இறந்து விட்டார். தாயார் மறுமணம் புரிந்து கொண்டு போய் விட்டார். தீரஜை அவரது தாத்தா பாட்டிதான் வளர்த்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?

news

ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?

news

மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!

news

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா

news

10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்

news

10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!

news

10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!

news

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931

news

The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்