டெல்லி: டெல்லியைச் சேர்ந்த 25 வயது சிஏ மாணவர் விபரீதமான முறையில் ஹீலியம் கேஸை நுகர்ந்து தனது முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் டெல்லியை அதிர வைத்துள்ளது.
டெல்லியில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது முடிவு குறித்து குறிப்பு ஒன்றையும் அவர் எழுதி வைத்திருந்தார். தனது சமூக வலைதளப் பக்கத்திலும் இதுகுறித்து அவர் எழுதி வைத்துள்ளார்.
டெல்லியில் இப்படி ஒரு விபரீதமான முறையிலான தற்கொலைச் சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். கோல் மார்க்கெட் பகுதியில் உள்ள ஏர்பிஎன்பி என்ற விடுதியில்தான் அந்த மாணவர் தங்கியிருந்தார். மரணத்தைத் தேடிக் கொண்ட மாணவரின் பெயர் தீரஜ் கன்சால். தனது அறையை விட்டு அவர் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர்கல் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் வந்து அறைக் கதவை உடைத்து உள்ளே போய்ப் பார்த்தபோதுதான் விபரீதம் தெரிய வந்தது.

ஆசை படத்தில் வருவது போல முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக் கொண்டு ஹீலியம் காஸ் சிலிண்டரில் உள்ள டியூபை தனது வாய்க்குள் நுழைத்துக் கொண்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் தீரஜ் கன்சால். தனது முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று பேஸ்புக்கில் எழுதி வைத்திருந்தார் தீரஜ். மேலும், எனது வாழ்க்கையில் நான் சந்தித்த ஒவ்வொருவரும் இரக்கமானவர்கள். நல்லவர்கள். எனவே எனது மரணத்துக்காக யாரையும் விசாரணை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்த வேண்டாம் என்று அவர் எழுதியிருந்தார். தனது உடல் உறுப்புகளையும் தானமாக கொடுத்து விடுமாறும் தனது பணத்தை ஆதரவற்றோருக்காக செலவிடுமாறும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
தீரஜ் சில காலமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை 2002ம் ஆண்டே இறந்து விட்டார். தாயார் மறுமணம் புரிந்து கொண்டு போய் விட்டார். தீரஜை அவரது தாத்தா பாட்டிதான் வளர்த்துள்ளனர்.
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}