டெல்லி: CBSE எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 2025ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட சற்று உயர்ந்து 88.39% ஆக உள்ளது.
சென்னை மண்டலத்தில் மொத்தம் 97.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். விஜயவாடா 99.60% தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. மாணவர்கள் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும், செய்முறை தேர்விலும் குறைந்தபட்சம் 33% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்கள் குறைவாக இருந்தால், கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மாணவர்களை விட மாணவிகளே 5% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்தார். 1.15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 90%க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 24,000க்கும் அதிகமானோர் 95%க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 1.29 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் துணைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். ரோல் நம்பர் மூலம் CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பதைப் பற்றியும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் கவலைப்பட வேண்டாம். துணைத் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது.
www.results.cbse.nic.in, www.cbse.govt.in, www.umang.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}