டெல்லி: CBSE எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 2025ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட சற்று உயர்ந்து 88.39% ஆக உள்ளது.
சென்னை மண்டலத்தில் மொத்தம் 97.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். விஜயவாடா 99.60% தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. மாணவர்கள் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும், செய்முறை தேர்விலும் குறைந்தபட்சம் 33% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்கள் குறைவாக இருந்தால், கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மாணவர்களை விட மாணவிகளே 5% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்தார். 1.15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 90%க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 24,000க்கும் அதிகமானோர் 95%க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 1.29 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் துணைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். ரோல் நம்பர் மூலம் CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பதைப் பற்றியும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் கவலைப்பட வேண்டாம். துணைத் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது.
www.results.cbse.nic.in, www.cbse.govt.in, www.umang.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
{{comments.comment}}