டெல்லி: CBSE எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 2025ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட சற்று உயர்ந்து 88.39% ஆக உள்ளது.
சென்னை மண்டலத்தில் மொத்தம் 97.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். விஜயவாடா 99.60% தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. மாணவர்கள் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும், செய்முறை தேர்விலும் குறைந்தபட்சம் 33% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்கள் குறைவாக இருந்தால், கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மாணவர்களை விட மாணவிகளே 5% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்தார். 1.15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 90%க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 24,000க்கும் அதிகமானோர் 95%க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 1.29 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் துணைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். ரோல் நம்பர் மூலம் CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பதைப் பற்றியும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் கவலைப்பட வேண்டாம். துணைத் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது.
www.results.cbse.nic.in, www.cbse.govt.in, www.umang.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 02, 2025... இன்று பணவரவை பெற போகும் ராசிக்காரர்கள்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
{{comments.comment}}