சென்னை: மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை காணப்படும். இந்த நிலையில், சர்வதேச சந்தையில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரேல் டீசல் விலை குறைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி உத்தரவிட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களே ஏற்கும் எனவும், நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது.. கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன்: ராமதாஸ்!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
லன்ச் டைம் வந்துருச்சா.. அதுக்கு முன்னாடி.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா.. உலக உணவு தினம்!
ரயில் பயணிகளுக்கு புதிய வசதி.. கேன்சல்லேஷன் கட்டணம் இல்லாமலேயே டிக்கெட்டை மாத்திக்கலாம்!
புதிய உச்சத்தில் தங்கம் விலை...ஒரு கிராம் ரூ.12,000 ஐ நெருங்கியது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம்.. பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தகவல்.. ராகுல் காந்தி கண்டனம்
8 போர்களை நிறுத்திய நான் தான் நோபல் பரிசுக்குத் தகுதியானவன்.. மீண்டும் டிரம்ப் பொறுமல்
சென்னையில் எப்ப Rain சீன் தெரியுமா.. 23 டூ 30.. செம மழை இருக்காம்.. என்ஜாய் பண்ண ரெடியாகுங்க!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2025... இன்று நன்மைகளை அதிகம் பெறும் ராசிகள்
{{comments.comment}}