ஜூன் 12ம் தேதிதான் .. ஆந்திர மாநில முதல்வராக.. அரியணை ஏறுகிறார்.. சந்திரபாபு நாயுடு?

Jun 06, 2024,05:33 PM IST

அமராவதி: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, வரும் ஜூன் 12ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


முன்னதாக சந்திரபாபு நாயுடு ஜூன் 9ஆம் தேதி பதவி ஏற்பதாக கூறப்பட்டது. ஆனால், அதே தேதியில்தான் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து ஆந்திர முதல்வரின் பதவி ஏற்பு விழா ஜூன் 12க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.




பதினெட்டாவது மக்களவைத்  தேர்தலுடன் 16 வது ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே  13ஆம் தேதி நடந்து முடிந்தது. ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. ஆளும் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் ஒரு அணியாகவும், தெலுங்கு தேசம் - பாஜக - பவன் கல்யாண் ஆகியோர் ஒரு அணியாகவும், காங்கிரஸ் இன்னொரு அணியாகவும் போட்டியிட்டனர். 


இதில் தெலுங்கு தேசம் கூட்டணி மொத்தம் உள்ள  175 தொகுதிகளில் 135 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஜெகன்மோகன் தலைமையிலான ஒஎஸ்ஆர் காங்கிரஸ் படு தோல்வி அடைந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2வது இடத்தை பவன் கல்யாண் கட்சி பிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

விஷாலை திருமணம் செய்யப் போகிறேன்.. ஆகஸ்ட் 29ல் கல்யாணம்.. அறிவித்தார் சாய் தன்ஷிகா

news

தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை: விசிக தலைவர் திருமாவளவன்!

news

கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!

news

Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?

news

வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!

news

மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

news

வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்