ஜூன் 12ம் தேதிதான் .. ஆந்திர மாநில முதல்வராக.. அரியணை ஏறுகிறார்.. சந்திரபாபு நாயுடு?

Jun 06, 2024,05:33 PM IST

அமராவதி: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, வரும் ஜூன் 12ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


முன்னதாக சந்திரபாபு நாயுடு ஜூன் 9ஆம் தேதி பதவி ஏற்பதாக கூறப்பட்டது. ஆனால், அதே தேதியில்தான் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து ஆந்திர முதல்வரின் பதவி ஏற்பு விழா ஜூன் 12க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.




பதினெட்டாவது மக்களவைத்  தேர்தலுடன் 16 வது ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே  13ஆம் தேதி நடந்து முடிந்தது. ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. ஆளும் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் ஒரு அணியாகவும், தெலுங்கு தேசம் - பாஜக - பவன் கல்யாண் ஆகியோர் ஒரு அணியாகவும், காங்கிரஸ் இன்னொரு அணியாகவும் போட்டியிட்டனர். 


இதில் தெலுங்கு தேசம் கூட்டணி மொத்தம் உள்ள  175 தொகுதிகளில் 135 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஜெகன்மோகன் தலைமையிலான ஒஎஸ்ஆர் காங்கிரஸ் படு தோல்வி அடைந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2வது இடத்தை பவன் கல்யாண் கட்சி பிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

news

முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!

news

டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு

news

அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!

news

நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைக்கு பஞ்சமே இல்லை... உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை: அன்புமணி

news

கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?

news

சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்

news

குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

அதிகம் பார்க்கும் செய்திகள்