ஜூன் 12ம் தேதிதான் .. ஆந்திர மாநில முதல்வராக.. அரியணை ஏறுகிறார்.. சந்திரபாபு நாயுடு?

Jun 06, 2024,05:33 PM IST

அமராவதி: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, வரும் ஜூன் 12ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


முன்னதாக சந்திரபாபு நாயுடு ஜூன் 9ஆம் தேதி பதவி ஏற்பதாக கூறப்பட்டது. ஆனால், அதே தேதியில்தான் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து ஆந்திர முதல்வரின் பதவி ஏற்பு விழா ஜூன் 12க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.




பதினெட்டாவது மக்களவைத்  தேர்தலுடன் 16 வது ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே  13ஆம் தேதி நடந்து முடிந்தது. ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. ஆளும் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் ஒரு அணியாகவும், தெலுங்கு தேசம் - பாஜக - பவன் கல்யாண் ஆகியோர் ஒரு அணியாகவும், காங்கிரஸ் இன்னொரு அணியாகவும் போட்டியிட்டனர். 


இதில் தெலுங்கு தேசம் கூட்டணி மொத்தம் உள்ள  175 தொகுதிகளில் 135 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஜெகன்மோகன் தலைமையிலான ஒஎஸ்ஆர் காங்கிரஸ் படு தோல்வி அடைந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2வது இடத்தை பவன் கல்யாண் கட்சி பிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்

news

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!

news

South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை

news

Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!

news

கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்

news

தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?

news

மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"

news

Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!

news

Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்