அமராவதி: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, வரும் ஜூன் 12ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சந்திரபாபு நாயுடு ஜூன் 9ஆம் தேதி பதவி ஏற்பதாக கூறப்பட்டது. ஆனால், அதே தேதியில்தான் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆந்திர முதல்வரின் பதவி ஏற்பு விழா ஜூன் 12க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுடன் 16 வது ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 13ஆம் தேதி நடந்து முடிந்தது. ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. ஆளும் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் ஒரு அணியாகவும், தெலுங்கு தேசம் - பாஜக - பவன் கல்யாண் ஆகியோர் ஒரு அணியாகவும், காங்கிரஸ் இன்னொரு அணியாகவும் போட்டியிட்டனர்.
இதில் தெலுங்கு தேசம் கூட்டணி மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 135 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஜெகன்மோகன் தலைமையிலான ஒஎஸ்ஆர் காங்கிரஸ் படு தோல்வி அடைந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2வது இடத்தை பவன் கல்யாண் கட்சி பிடித்துள்ளது.
India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
{{comments.comment}}