Weather Forecast: அடுத்த 2 நாட்களுக்கு 2 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரிக்கும்.. வானிலை மையம்

Mar 29, 2025,03:42 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு 2 டிகிரி வரை அதிகபட்ச வெப்ப நிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் இப்போதே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. வெளியில் செல்லவே தயங்கும் அளவுக்கு வெயில் வறுத்தெடுக்கிறது. இந்த நிலையில் இன்று முதல் 2 நாட்களுக்கு வழக்கமான அளவிலிருந்து 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு விவரம் வருமாறு:




29ம் தேதி முதல் 30ம் தேதி வறண்ட வானிலையே நிலவும். சராசரி அதிகபட்ச வெப்ப நிலை சில இடங்களில் 1 முதல் 2 டிகிரி வரை அதிகரித்துக் காணப்படும்.


31ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். அதேசமயம், சில இடங்களில் லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வெயில் 99 டிகிரி முதல் 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்ப நிலையில் உயர்வு காணப்படும் என்பதால் வெளியில் செல்வோர் மிகுந்த கவனத்துடன், முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது. அதிக நேரம் வெயிலில் இருக்காமல் பார்த்துக் கொள்ளவும். அதிக அளவில் தண்ணீர், இளநீர், ஜூஸ் போன்றவற்றைக் குடிக்கவும். மோர் குடிப்பது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்

news

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!

news

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

news

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!

news

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!

news

கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

news

'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!

news

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்