சென்னை: சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் நேற்று இரவு முதல் காலை வரை விட்டு விட்டுப் பெய்த கன மழையால் ஊரே குளிர்ந்து போய்க் கிடக்கிறது.
ஆவணி மாதத்தில் இப்படி விட்டு வெளுப்பதெல்லாம் ஒரு அரிய சம்பவம்தான். காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மட்டுமல்லாமல், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கூட 100 மிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. அதுவும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 2 நாட்களாக நல்ல மழை பெய்துள்ளது.
இதற்கு முன்பு 1996ம் ஆண்டுதான் இப்படி மழை பெய்துள்ளது. தொடர்ச்சியாக 3 நாட்களாக 100 மிமீட்டருக்கு மேல் அப்போது மழை பெய்திருந்தது. இன்றும் கூட சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 170.5 மிமீ மழை பெய்துள்ளது. மடிப்பாக்கம் 149, நெற்குன்றம் 139, கொரட்டூர் 136 மிமீ மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரத்தை விட ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் 100 மில்லி மீட்டருக்கு மேல் அதிக அளவிலான மழை பெய்துள்ளது. விடிய விடிய விட்டு விட்டுப் பெய்த கன மழையால் சென்னை நகரமே ஏசி போட்டது போல குளுகுளுவென மாறியுள்ளது. மழை பெய்து போது பல இடங்களில் நீர் தேங்கினாலும் மழை விட்ட பின்னர் நீர் வடிந்து விட்டதால் பெரிய அளவில் பிரச்சினை இல்லை.
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
திருக்கடையூரில் பிறந்த குங்கிலியக் கலய நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
{{comments.comment}}