சென்னை: சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக செயல்பட்டு வரும் சதீஷ்குமார் என்பவர் சமீபத்தில் சென்னை கோயம்பேடு பழம் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் தர்பூசணி பழங்களில் ஊசியின் மூலம் கெமிக்கல் சேர்த்து சிவப்பு நிறத்தில் விற்கப்படுவதாகவும் அதை மக்கள் வாங்கி சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிப்பதாகவும் வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனால் தர்பூசணி பழங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனெனில் ஒரு கிலோ தர்ப்பூசணி 15 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் தர்பூசணி குறித்த சர்ச்சைக்குப் பிறகு இரண்டு ரூபாய் கூட வாங்க ஆளில்லை என விவசாயிகள் கடும் அதிர்ருப்தி அடைந்தனர்.
அதேபோல் வயலில் அறுவடை செய்யாமலே தர்பூசணி பழங்கள் அழுகும் நிலையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாரை கண்டித்து கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தர்பூசணி பழங்களை சாலையில் போட்டு உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.
இதற்கிடையே தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தர்ப்பூசணியை செயற்கையாக பழுக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு நாட்களில் தானாகவே படுத்து விடும். தர்பூசணிகள் குறித்து கூறும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.அதிகாரிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு சிறு குறு வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் வியாபாரிகள் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி போஸ் என்பவர், சென்னை மாவட்டத்தை கூடுதலாக கவனிப்பார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
{{comments.comment}}