சென்னை: சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக செயல்பட்டு வரும் சதீஷ்குமார் என்பவர் சமீபத்தில் சென்னை கோயம்பேடு பழம் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் தர்பூசணி பழங்களில் ஊசியின் மூலம் கெமிக்கல் சேர்த்து சிவப்பு நிறத்தில் விற்கப்படுவதாகவும் அதை மக்கள் வாங்கி சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிப்பதாகவும் வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனால் தர்பூசணி பழங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனெனில் ஒரு கிலோ தர்ப்பூசணி 15 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் தர்பூசணி குறித்த சர்ச்சைக்குப் பிறகு இரண்டு ரூபாய் கூட வாங்க ஆளில்லை என விவசாயிகள் கடும் அதிர்ருப்தி அடைந்தனர்.
அதேபோல் வயலில் அறுவடை செய்யாமலே தர்பூசணி பழங்கள் அழுகும் நிலையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாரை கண்டித்து கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தர்பூசணி பழங்களை சாலையில் போட்டு உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.
இதற்கிடையே தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தர்ப்பூசணியை செயற்கையாக பழுக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு நாட்களில் தானாகவே படுத்து விடும். தர்பூசணிகள் குறித்து கூறும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.அதிகாரிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு சிறு குறு வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் வியாபாரிகள் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி போஸ் என்பவர், சென்னை மாவட்டத்தை கூடுதலாக கவனிப்பார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}