சென்னை: சென்னையின் முக்கியப் பகுதிகளில் ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் (CMWSSB) அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் இணைப்புப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதால், பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எப்போது குடிநீர் நிறுத்தம்?
ஜூன் 13ஆம் தேதி சனிக்கிழமை காலை 10:00 மணி முதல், ஜூன் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி வரை என தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும்.
காரணம் என்ன?
அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பாடி மேம்பாலம் அருகே பிரதான குடிநீர் குழாய்களை இணைக்கும் பணிகள் (Pipeline interconnection works) நடைபெற உள்ளன. இப்பணிகளை தடையின்றி விரைவாக முடிப்பதற்காக, குறிப்பிட்ட மண்டலங்களில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
பாதிக்கப்படும் மண்டலங்கள் மற்றும் பகுதிகள்:

சென்னையின் மண்டலம் 6, 7 மற்றும் 8 ஆகிய மூன்று மண்டலங்களுக்கு உட்பட்ட சில முக்கியப் பகுதிகளில் இந்த குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதன் விவரங்கள் பின்வருமாறு:
மண்டலம் 6: கொளத்தூர், ஜவகர் நகர், செம்பியம், அயனாவரம் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகள்.
மண்டலம் 7: கொரட்டூர் பகுதி.
மண்டலம் 8: வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் மேற்கு ஆகிய பகுதிகள்.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்:
குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளிலுள்ள பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் இணையதளம் வாயிலாகவோ அல்லது அந்தந்த பகுதி அலுவலகங்களைத் தொடர்பு கொண்டோ பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் ஜூன் 14ஆம் தேதி காலை முதல் குடிநீர் விநியோகம் படிப்படியாக சீராகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் பாதிகளாக சொல்லப்பட்டுள்ள பகுதிகளில் பெரம்பூர், முதல்வர் விஜய்யின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் வில்லிவாக்கம், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
வீண் சொல் தவிர்த்திடு
அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
RIP Bharathiraja: பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை...
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
சினிமாவின் சிகரம் சரிந்தது!
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
{{comments.comment}}