சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி தப்பினார். அதேசமயம், அவரது கார் டிரைவர் லேசான காயமடைந்தார்.
மேயர் பிரியா ராஜன் தனது காரில், ஸ்ரீபெரும்புதூர் நோக்கி இன்று மாலை சென்று கொண்டிருந்தார். காரில் அவர், அவரது தந்தை, உதவியாளர் ஆகியோர் இருந்துள்ளனர். கார் பூந்தமல்லி நெடுஞ்சாலை குப்பம் பகுதியில் சென்றபோது திடீரென அவரது காருக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த கார் சடர்ன் பிரேக் போட்டு நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியாவின் கார் டிரைவர், காரை நிறுத்த முயன்றார். ஆனாலும் முன்னால் இருந்த கார் மீது மோதி மேயரின் கார் நின்றது.
அவரது கார் திடீரென நின்றதால் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, மேயரின் காரின் பின் பகுதியில் மோதியது. இதனால் காரின் முன்னும் பின்னும் சேதமடைந்தது. இருப்பினும் மேயர் பிரியாவுக்கு காயம் ஏதும் இல்லை. அதேசமயம், அவரது டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மாற்று கார் கொண்டு வரப்பட்டு மேயர் பிரியா உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றனர். இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் மேயர் பிரியாவின் கார் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தில் சிக்கிய மற்ற வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}