சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது.. அதிர்ஷ்டவசமாக தப்பினார்.. டிரைவர் காயம்!

Feb 23, 2024,11:03 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி தப்பினார். அதேசமயம், அவரது கார் டிரைவர் லேசான காயமடைந்தார்.


மேயர் பிரியா ராஜன் தனது காரில், ஸ்ரீபெரும்புதூர் நோக்கி இன்று மாலை சென்று கொண்டிருந்தார். காரில் அவர், அவரது தந்தை, உதவியாளர் ஆகியோர் இருந்துள்ளனர். கார் பூந்தமல்லி நெடுஞ்சாலை குப்பம் பகுதியில் சென்றபோது திடீரென அவரது காருக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த கார் சடர்ன் பிரேக் போட்டு நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியாவின் கார் டிரைவர், காரை நிறுத்த முயன்றார். ஆனாலும் முன்னால் இருந்த கார் மீது மோதி  மேயரின் கார் நின்றது. 




அவரது கார் திடீரென நின்றதால் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, மேயரின் காரின் பின் பகுதியில் மோதியது. இதனால் காரின் முன்னும் பின்னும் சேதமடைந்தது. இருப்பினும் மேயர் பிரியாவுக்கு காயம் ஏதும் இல்லை. அதேசமயம், அவரது டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 


இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மாற்று கார் கொண்டு வரப்பட்டு மேயர் பிரியா உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றனர்.  இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விபத்தில் மேயர் பிரியாவின் கார் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தில் சிக்கிய மற்ற வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்