சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி தப்பினார். அதேசமயம், அவரது கார் டிரைவர் லேசான காயமடைந்தார்.
மேயர் பிரியா ராஜன் தனது காரில், ஸ்ரீபெரும்புதூர் நோக்கி இன்று மாலை சென்று கொண்டிருந்தார். காரில் அவர், அவரது தந்தை, உதவியாளர் ஆகியோர் இருந்துள்ளனர். கார் பூந்தமல்லி நெடுஞ்சாலை குப்பம் பகுதியில் சென்றபோது திடீரென அவரது காருக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த கார் சடர்ன் பிரேக் போட்டு நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியாவின் கார் டிரைவர், காரை நிறுத்த முயன்றார். ஆனாலும் முன்னால் இருந்த கார் மீது மோதி மேயரின் கார் நின்றது.
அவரது கார் திடீரென நின்றதால் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, மேயரின் காரின் பின் பகுதியில் மோதியது. இதனால் காரின் முன்னும் பின்னும் சேதமடைந்தது. இருப்பினும் மேயர் பிரியாவுக்கு காயம் ஏதும் இல்லை. அதேசமயம், அவரது டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மாற்று கார் கொண்டு வரப்பட்டு மேயர் பிரியா உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றனர். இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் மேயர் பிரியாவின் கார் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தில் சிக்கிய மற்ற வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}