சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி தப்பினார். அதேசமயம், அவரது கார் டிரைவர் லேசான காயமடைந்தார்.
மேயர் பிரியா ராஜன் தனது காரில், ஸ்ரீபெரும்புதூர் நோக்கி இன்று மாலை சென்று கொண்டிருந்தார். காரில் அவர், அவரது தந்தை, உதவியாளர் ஆகியோர் இருந்துள்ளனர். கார் பூந்தமல்லி நெடுஞ்சாலை குப்பம் பகுதியில் சென்றபோது திடீரென அவரது காருக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த கார் சடர்ன் பிரேக் போட்டு நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியாவின் கார் டிரைவர், காரை நிறுத்த முயன்றார். ஆனாலும் முன்னால் இருந்த கார் மீது மோதி மேயரின் கார் நின்றது.

அவரது கார் திடீரென நின்றதால் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, மேயரின் காரின் பின் பகுதியில் மோதியது. இதனால் காரின் முன்னும் பின்னும் சேதமடைந்தது. இருப்பினும் மேயர் பிரியாவுக்கு காயம் ஏதும் இல்லை. அதேசமயம், அவரது டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மாற்று கார் கொண்டு வரப்பட்டு மேயர் பிரியா உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றனர். இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் மேயர் பிரியாவின் கார் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தில் சிக்கிய மற்ற வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் .. சர்வதேச யோகா தினம்.. மாணவர்கள் அசத்தல்
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
பூரிக்கும் புன்னகைக்கு பூக்களும் சிரிக்குமே
சிந்தனைச் சிதறல்.. வளமைக்கு ஒரு காலம் என்றால்.. மகிழ்ச்சிக்கு ஒரு காலம்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
When people come together as one... வெற்றி நமதே!
{{comments.comment}}