சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் சேவை சரியானது... மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

Dec 17, 2024,11:44 AM IST

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் சர்வர் பிரச்சனை சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், பயணிகள் வழக்கம் போல் ஆன்லைனில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்றும் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளதுள்ளது.


சென்னை மின்சார ரயில்களுக்கு அடுத்த படியாக சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கவும், அவசரமாக அலுவலகம் செல்பவர்கள் நேரத்தை மிச்சம் செய்து, கூட்டத்தில் இடிபடாமல் செல்வதற்கு வசதியாக இருப்பதால் பலரும் மெட்ரோ சேவைகளை பயன்படுத்த துவங்கி உள்ளனர். மொட்ரோ ரயில்களை பயன்படுத்துவோருக்காக பல சலுகைகள், வசதிகள் ஆகியவற்றை சென்னை மெட்ரோ நிர்வாகம் அவ்வவ்போது அறிவித்து வருகிறது.


அப்படி சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் கவுண்டரில் வரிசையில் காத்திருக்காமல் இருப்பதற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் நடைமுறை தற்போது இருந்து வருகிறது. பலரும் இதை பயன்படுத்தி வந்தனர். இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் டிக்கெட் எடுக்க முடிந்ததால் பலருக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 17) காலை முதல் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பலரும் ஆன்லைனில் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.




இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. மற்றொரு புறம் மெட்ரோ ஸ்டேஷன்களில் டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியது. பயணிகளிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததால், தங்களின் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் பயணிகள் ஸ்டேஷன்களில் நேரடியாக சென்று டிக்கெட் எடுத்து, பயணம் செய்யும் படியும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இந்நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாகவும், சிங்கார சென்னை உள்ளிட்ட அனைத்து டிக்கெட்கள், கார்டுகளையும் பெறும் சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் மீண்டும் ஒரு போஸ்ட் போட்டு பயணிகளுக்கு தெளிவுபடுத்தி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியானது.. தேர்ச்சி விகிதம் மொத்தம் 92.09% !

news

தமிழ்நாட்டில்.. மே மாத இறுதியில் கோடை வெயில்.. இயல்பை விட குறையும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

news

தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!

news

பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!

news

என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை

news

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு

news

cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்

news

இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்