வம்பாக பேசி சிக்கிய ஆன்மீக பேச்சாளர்.. ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது

Sep 14, 2023,11:31 AM IST

சென்னை:  பெரியார், திருவள்ளுவர், அம்பேத்கர் உள்ளிட்டோர்  குறித்து அவதூறாக பேசியதற்காக ஆன்மீக பேச்சாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது செய்யப்பட்டார்.

இந்துத்துவா சிந்தனையாளரும், ஆன்மீக பேச்சாளரும், வி.எச்.பி. முன்னாள் மாநிலத் துணைத் தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியன் சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசினார். திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்களை பற்றி ஒருமையில் இழிவாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த இரு நாட்களாக வைரலாகி வந்தது. 



இவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் புகார்களும் வந்தன. அவர் மீது சென்னை காவல்நிலையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆர்.பி.வி.எஸ். மணியனை அவரது சென்னை மாம்பலத்தில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்தனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

news

இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

news

தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

news

93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!

news

முக ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது... நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டார்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

அதிகம் பார்க்கும் செய்திகள்