வம்பாக பேசி சிக்கிய ஆன்மீக பேச்சாளர்.. ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது

Sep 14, 2023,11:31 AM IST

சென்னை:  பெரியார், திருவள்ளுவர், அம்பேத்கர் உள்ளிட்டோர்  குறித்து அவதூறாக பேசியதற்காக ஆன்மீக பேச்சாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது செய்யப்பட்டார்.

இந்துத்துவா சிந்தனையாளரும், ஆன்மீக பேச்சாளரும், வி.எச்.பி. முன்னாள் மாநிலத் துணைத் தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியன் சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசினார். திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்களை பற்றி ஒருமையில் இழிவாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த இரு நாட்களாக வைரலாகி வந்தது. 



இவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் புகார்களும் வந்தன. அவர் மீது சென்னை காவல்நிலையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆர்.பி.வி.எஸ். மணியனை அவரது சென்னை மாம்பலத்தில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்தனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

This is what a toxic relationship looks like.. வெட்டவும் முடியாது.. ஒட்டியிருக்கவும் முடியாது!

news

The Measure of a Teacher.. ஆசிரியரின் மாண்பு!

news

பெரும்பான்மையை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் சொல்லிருக்கு.. கமல்ஹாசன்

news

விஜய் ஆட்சி அமைக்க பெருகும் ஆதரவு... இவங்களா இப்படி பேசுறாங்க? ஒரே வாரத்தில் மாறிய சூழல்!

news

எஞ்சாத வாட்டாயின் அடியார்க்கும் அடியேன்.. அரிவட்ட நாயனார்!

news

தேய்பிறை சஷ்டி விரதம்.. ஆறுமுகப் பெருமானுக்கு உரிய திதி!

news

விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

news

விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. அபிஷேக் மனு சிங்வி

news

ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்

அதிகம் பார்க்கும் செய்திகள்