வட தமிழ்நாட்டை நோக்கி நகர்கிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு.. 18ம் தேதி வரை மழை நீடிக்கும்

Nov 12, 2024,05:24 PM IST

சென்னை: தென்மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 18ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக இலங்கை  கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால் சென்னையில் நவம்பர் 15ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 




அதன்படி  தற்போது அந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழ்நாட்டுக்கு நடுவே நிலை கொண்டுள்ளது. அது தொடர்ந்து வடக்கு தமிழ்நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக வருகிற 18ம் தேதி வரை மிதமான மற்றும் கன மழை தொடரும்.


சென்னையில் விடிய விடிய மிதமான மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. சென்னை கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றமும் காணப்பட்டது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னையில் தொடர்ந்து மிதமான மழை  பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், எம் ஜி ஆர் நகர், மந்தவெளி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு அண்ணா சாலை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், உள்ளிட்ட அனைத்து  இடங்களிலும் அடை மழை பெய்து வருகிறது.


21 இடங்களில் கன மழை


சென்னையில் 21 இடங்களில் 12 மில்லி மீட்டருக்கும் அதிகமாக  மழை பதிவாகியுள்ளது. காலை 10 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், ஆகிய ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்