சம்மர் பிரிச்செடுத்தா என்ன.. வாட்டருக்குப் பிரச்சினை வராது.. சென்னைக்கு ஜாலிதான்!

Apr 24, 2023,12:10 PM IST
சென்னை: சென்னையில் கோடை காலம் ஆரம்பித்து விட்டது. அக்னி நட்சத்திரம் வருவதற்கு முன்பாகவே வெயில் வெளுக்கிறது. இருப்பினும் குடிநீர் விநியோகம் இந்த முறை பெரிதாக பாதிக்காது என்று நம்பலாம்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி விட்டது. இடையில் கோடை மழை ஆங்காங்கு பெய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் சென்னை மக்களுக்கு ஒரு வித்தியாசமான பிரச்சினை வருடா வருடம் வரும். மழைக்காலத்தில் ஓவர் தண்ணீராக இருக்கும் ஊரெல்லாம் . ஊரே  மிதக்கும் நிலை வரும். அதுவே கோடைகாலத்தில் குடிநீருக்குப் பற்றாக்குறை வரும். இப்படி ஒரு வித்தியாசமான சூழலை ஆண்டுதோறும் சென்னை மக்கள் சந்தித்து வருவது வழக்கம்தான்.

ஆனால் இந்த முறை மழைக்காலத்தில் பெரிய அளவில் சென்னை பாதிக்கப்படவில்லை. அதேபோல கோடை காலத்திலும் குடிநீருக்குப் பிரச்சினை வராது என்றே தெரிகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள், நீர்த்தேக்கங்களில் போதியஅளவுக்கு நீர் இருப்பு உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 24ம் தேதி நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் (அடிகளில்)

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை - 35.95 (கொள்ளளவு: 36.61)
பூண்டி - 27.58 (35.00)
செம்பரம்பாக்கம் - 20.88 (24.00)
புழல் - 17.07 (21.20)
சோழவரம் - 16.81 (18.86)
வீராணம் - 11.65 (15.60)

எனவே இந்த கோடைகாலத்தை குடிநீர்ப் பிரச்சினை இல்லாமல் கழிக்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். அதேசமயம், போதுமான அளவில் கோடை மழையும் பெய்தால் நன்றாக இருக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்