சம்மர் பிரிச்செடுத்தா என்ன.. வாட்டருக்குப் பிரச்சினை வராது.. சென்னைக்கு ஜாலிதான்!

Apr 24, 2023,12:10 PM IST
சென்னை: சென்னையில் கோடை காலம் ஆரம்பித்து விட்டது. அக்னி நட்சத்திரம் வருவதற்கு முன்பாகவே வெயில் வெளுக்கிறது. இருப்பினும் குடிநீர் விநியோகம் இந்த முறை பெரிதாக பாதிக்காது என்று நம்பலாம்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி விட்டது. இடையில் கோடை மழை ஆங்காங்கு பெய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் சென்னை மக்களுக்கு ஒரு வித்தியாசமான பிரச்சினை வருடா வருடம் வரும். மழைக்காலத்தில் ஓவர் தண்ணீராக இருக்கும் ஊரெல்லாம் . ஊரே  மிதக்கும் நிலை வரும். அதுவே கோடைகாலத்தில் குடிநீருக்குப் பற்றாக்குறை வரும். இப்படி ஒரு வித்தியாசமான சூழலை ஆண்டுதோறும் சென்னை மக்கள் சந்தித்து வருவது வழக்கம்தான்.

ஆனால் இந்த முறை மழைக்காலத்தில் பெரிய அளவில் சென்னை பாதிக்கப்படவில்லை. அதேபோல கோடை காலத்திலும் குடிநீருக்குப் பிரச்சினை வராது என்றே தெரிகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள், நீர்த்தேக்கங்களில் போதியஅளவுக்கு நீர் இருப்பு உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 24ம் தேதி நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் (அடிகளில்)

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை - 35.95 (கொள்ளளவு: 36.61)
பூண்டி - 27.58 (35.00)
செம்பரம்பாக்கம் - 20.88 (24.00)
புழல் - 17.07 (21.20)
சோழவரம் - 16.81 (18.86)
வீராணம் - 11.65 (15.60)

எனவே இந்த கோடைகாலத்தை குடிநீர்ப் பிரச்சினை இல்லாமல் கழிக்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். அதேசமயம், போதுமான அளவில் கோடை மழையும் பெய்தால் நன்றாக இருக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்