சென்னை: மழையால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், அணைகள் அனைத்து நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கட்டிடத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டோம். திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. மீட்பு பணிக்காக தென்காசிக்கு அமைச்சர் கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அனுப்பி வைத்துள்ளோம்.
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி ரூ. 2000 பொது மக்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. எவ்வளவு மழை பாதிப்பு ஏற்பட்டாலும் அதை சந்திக்க அரசு தயாராக உள்ளது. மழை காரணமாக மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு வந்ததாக தகவல் வரவில்லை. ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கும் முன்பு உரிய முன்னெச்சரிக்கை கொடுக்கப்படுகிறது.
ஒன்றிய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை. மழை நிலவரம், பாதிப்புகள், அணைகளின் நீர் திறப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஒன்று சேர்த்து கடுமையாக எதிர்ப்போம். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்போம் என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
சுதந்திரம் எனும் ஒளி
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?
{{comments.comment}}