சென்னை: மழையால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், அணைகள் அனைத்து நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கட்டிடத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டோம். திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. மீட்பு பணிக்காக தென்காசிக்கு அமைச்சர் கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அனுப்பி வைத்துள்ளோம்.
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி ரூ. 2000 பொது மக்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. எவ்வளவு மழை பாதிப்பு ஏற்பட்டாலும் அதை சந்திக்க அரசு தயாராக உள்ளது. மழை காரணமாக மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு வந்ததாக தகவல் வரவில்லை. ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கும் முன்பு உரிய முன்னெச்சரிக்கை கொடுக்கப்படுகிறது.
ஒன்றிய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை. மழை நிலவரம், பாதிப்புகள், அணைகளின் நீர் திறப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஒன்று சேர்த்து கடுமையாக எதிர்ப்போம். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்போம் என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!
யாசகத்தோழி!
வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!
பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!
சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!
Fermented rice: பழைய சோறு.. வெயில் வந்தாலே.. இதுவும் நம்மை நாடி வந்து விடும்!
Housewives எல்லாம் சும்மா இல்லைங்க.. அவர்கள் பாராட்டப்படாத உழைப்பாளிகள்!
Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!
World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!
{{comments.comment}}