சின்ன சின்ன பதம் வைத்து கண்ணன் வந்தான்!

Nov 27, 2025,11:17 AM IST

- கோ. அறிவுசெல்வி இராஜாராம்


சின்ன சின்ன பதம் வைத்து 

கண்ணன் வந்தான் ......


செம்பவழ வாய் மலர்ந்து 

செம்மொழியில்  குழல்

ஊதினான்


அசைந்து வரும் 

தேரினிலே......

கள்ளழகன் வந்தான்

துள்ளி வரும் அவன் 

அழகோ அழகு.....




முதுவேனிற் காலம் 

புது மழைக் காலம் 


கருநிற முகில்கள் 

கருக் கொண்ட நீரை 

பனிக் குடம் உடைத்து 

தணிக்கும் தாமோதரன் 


சோனை ஆன சேனை 

ஆனை போலும் அழிக்கும் கண்ணன்

பாதம் குளிரும் 

தேகம் தளரும்


மாதவன்

தன்னைக் கவர்ச்சியாக்கி 

மண்ணை மலர்ச்சியாக்கும் மாலவன்..!


ஆழ்வார் நாவிலே ஹரிநாமம் 

அடியார் மனதிலே ஹரிநாமம் 

மறவாமல் ஓதிடுவோம் 

ஒவ்வொரு நிமிடமும் ஹரிநாமம் 

அல்லலற்று அகம் மகிழ்ந்திடுவோம் ஆராவமுதனுடனே


பஞ்சமியிலே அலர்மேல் மங்கையை பாடிடுவோம் 

பாரோர் வாழவே வழிபடுவோம்  

வள்ளல் பெருஞ்தேவி தாயாரையே 

தனம் தந்து தாங்கிடுவாள் தரணிநாயகி 

மனம் கவர்ந்த மணவாளனுடன் 

மண்ணும் விண்ணும் மலர்ந்திடவே...!


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்