- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
சின்ன சின்ன பதம் வைத்து
கண்ணன் வந்தான் ......
செம்பவழ வாய் மலர்ந்து
செம்மொழியில் குழல்
ஊதினான்
அசைந்து வரும்
தேரினிலே......
கள்ளழகன் வந்தான்
துள்ளி வரும் அவன்
அழகோ அழகு.....

முதுவேனிற் காலம்
புது மழைக் காலம்
கருநிற முகில்கள்
கருக் கொண்ட நீரை
பனிக் குடம் உடைத்து
தணிக்கும் தாமோதரன்
சோனை ஆன சேனை
ஆனை போலும் அழிக்கும் கண்ணன்
பாதம் குளிரும்
தேகம் தளரும்
மாதவன்
தன்னைக் கவர்ச்சியாக்கி
மண்ணை மலர்ச்சியாக்கும் மாலவன்..!
ஆழ்வார் நாவிலே ஹரிநாமம்
ஒவ்வொரு நிமிடமும் ஹரிநாமம்
அல்லலற்று அகம் மகிழ்ந்திடுவோம் ஆராவமுதனுடனே
பஞ்சமியிலே அலர்மேல் மங்கையை பாடிடுவோம்
பாரோர் வாழவே வழிபடுவோம்
வள்ளல் பெருஞ்தேவி தாயாரையே
தனம் தந்து தாங்கிடுவாள் தரணிநாயகி
மனம் கவர்ந்த மணவாளனுடன்
மண்ணும் விண்ணும் மலர்ந்திடவே...!
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}