- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
சின்ன சின்ன பதம் வைத்து
கண்ணன் வந்தான் ......
செம்பவழ வாய் மலர்ந்து
செம்மொழியில் குழல்
ஊதினான்
அசைந்து வரும்
தேரினிலே......
கள்ளழகன் வந்தான்
துள்ளி வரும் அவன்
அழகோ அழகு.....

முதுவேனிற் காலம்
புது மழைக் காலம்
கருநிற முகில்கள்
கருக் கொண்ட நீரை
பனிக் குடம் உடைத்து
தணிக்கும் தாமோதரன்
சோனை ஆன சேனை
ஆனை போலும் அழிக்கும் கண்ணன்
பாதம் குளிரும்
தேகம் தளரும்
மாதவன்
தன்னைக் கவர்ச்சியாக்கி
மண்ணை மலர்ச்சியாக்கும் மாலவன்..!
ஆழ்வார் நாவிலே ஹரிநாமம்
ஒவ்வொரு நிமிடமும் ஹரிநாமம்
அல்லலற்று அகம் மகிழ்ந்திடுவோம் ஆராவமுதனுடனே
பஞ்சமியிலே அலர்மேல் மங்கையை பாடிடுவோம்
பாரோர் வாழவே வழிபடுவோம்
வள்ளல் பெருஞ்தேவி தாயாரையே
தனம் தந்து தாங்கிடுவாள் தரணிநாயகி
மனம் கவர்ந்த மணவாளனுடன்
மண்ணும் விண்ணும் மலர்ந்திடவே...!
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}