சென்னை: தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டியில் மாணவர் சேர்க்கை குறைவு உள்கட்டமைப்பு இல்லாதது போன்ற பல காரணங்களால் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 460க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.இ,பி.டெக், ஆகிய படிப்புகளில் 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. நடப்பு கல்லியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. பொறியியல் கலந்தாய்வை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்பு பிரிவில் வரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வு இன்று முதல் செப்., 11ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29 முதல் தொடங்குகிறது. இந்தாண்டு நடக்கும் கலந்தாய்வில், 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல காரணங்களால் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் ரத்து செய்துள்ளது. இந்த ஆண்டு போலவே சென்ற ஆண்டும் 11 கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!
தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை
வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்
Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
{{comments.comment}}