சென்னை: தமிழ்நாடு நிறைவேற்றிய நீட் தேர்வு சட்ட மசோதாவை ஒன்றிய அரசு மறுத்துவிட்டதால் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக தொடர்ந்து போராடும். நீட் விவகாரத்தில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை இன்று கூடியது. அப்போது அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதி மறுத்ததாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேறினர். இதனை தொடர்ந்து நீட் விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

நீட் தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது. நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர் ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டா கனியாக உள்ளது. மருத்துவத்துறையில் நாட்டிற்கு முன்னோடியாக திகழ்கிறது தமிழ்நாடு. நுழைவுத் தேர்வு ரத்து செய்வதன் பயனாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வு விலக்கு அளிக்கும் சட்டம் முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவு மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி மசோதா அனுப்பப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. ஆனால் பல்வேறு விளக்கங்கள் அளித்த பிறகும் கூட சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மசோதாவை மத்திய அரசு மறுத்து விட்டதால் தமிழக அரசின் சட்ட ரீதியான போராட்டம் தொடரும்.
நீட் விவகாரத்தில் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}