நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

Apr 04, 2025,06:49 PM IST


சென்னை: தமிழ்நாடு நிறைவேற்றிய நீட் தேர்வு சட்ட மசோதாவை ஒன்றிய அரசு மறுத்துவிட்டதால் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக தொடர்ந்து போராடும். நீட்  விவகாரத்தில்  ஏப்ரல் ஒன்பதாம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழக சட்டப் பேரவை இன்று கூடியது. அப்போது அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதி மறுத்ததாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேறினர். இதனை தொடர்ந்து  நீட் விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியான  அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 




நீட் தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது. நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர் ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு  மருத்துவ படிப்பு என்பது எட்டா கனியாக உள்ளது. மருத்துவத்துறையில் நாட்டிற்கு முன்னோடியாக திகழ்கிறது தமிழ்நாடு. நுழைவுத் தேர்வு ரத்து செய்வதன் பயனாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம். 


கடந்த 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வு விலக்கு அளிக்கும் சட்டம் முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவு மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி மசோதா அனுப்பப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. ஆனால் பல்வேறு விளக்கங்கள் அளித்த பிறகும் கூட சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மசோதாவை மத்திய அரசு மறுத்து விட்டதால் தமிழக அரசின் சட்ட ரீதியான போராட்டம் தொடரும். 

 நீட் விவகாரத்தில் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி சட்டமன்ற  அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்