சென்னை: தமிழ்நாடு நிறைவேற்றிய நீட் தேர்வு சட்ட மசோதாவை ஒன்றிய அரசு மறுத்துவிட்டதால் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக தொடர்ந்து போராடும். நீட் விவகாரத்தில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை இன்று கூடியது. அப்போது அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதி மறுத்ததாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேறினர். இதனை தொடர்ந்து நீட் விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
நீட் தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது. நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர் ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டா கனியாக உள்ளது. மருத்துவத்துறையில் நாட்டிற்கு முன்னோடியாக திகழ்கிறது தமிழ்நாடு. நுழைவுத் தேர்வு ரத்து செய்வதன் பயனாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வு விலக்கு அளிக்கும் சட்டம் முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவு மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி மசோதா அனுப்பப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. ஆனால் பல்வேறு விளக்கங்கள் அளித்த பிறகும் கூட சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மசோதாவை மத்திய அரசு மறுத்து விட்டதால் தமிழக அரசின் சட்ட ரீதியான போராட்டம் தொடரும்.
நீட் விவகாரத்தில் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}