சென்னை: தமிழ்நாடு நிறைவேற்றிய நீட் தேர்வு சட்ட மசோதாவை ஒன்றிய அரசு மறுத்துவிட்டதால் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக தொடர்ந்து போராடும். நீட் விவகாரத்தில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை இன்று கூடியது. அப்போது அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதி மறுத்ததாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேறினர். இதனை தொடர்ந்து நீட் விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

நீட் தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது. நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர் ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டா கனியாக உள்ளது. மருத்துவத்துறையில் நாட்டிற்கு முன்னோடியாக திகழ்கிறது தமிழ்நாடு. நுழைவுத் தேர்வு ரத்து செய்வதன் பயனாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வு விலக்கு அளிக்கும் சட்டம் முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவு மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி மசோதா அனுப்பப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. ஆனால் பல்வேறு விளக்கங்கள் அளித்த பிறகும் கூட சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மசோதாவை மத்திய அரசு மறுத்து விட்டதால் தமிழக அரசின் சட்ட ரீதியான போராட்டம் தொடரும்.
நீட் விவகாரத்தில் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}