சென்னை: பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட 7 பெண்களுக்கு நீதிமன்றம் அறிவித்த நிவாரண தொகையுடன், கூடுதலாக தலா 25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி வழக்கில் கடந்த ஆறு வருடங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் தீர்ப்பு கிடைத்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என குறிப்பிட்டு, சாகும் வரை அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் பாதிக்கப்பட்ட ஏழு பெண்களுக்கும் தலா 10 முதல் 15 லட்சம் வரை என மொத்தம் 85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் மொத்தமாக அறிவித்த 85 லட்சம் நிவாரண தொகையுடன் கூடுதலாக தலா 25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் நீதிமன்றம் விசாரணைக் குழு ஒத்துழைப்பும் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.
அத்தகைய நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது.அந்த வகையில் நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகிய ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் முதல்வர் மு.க உத்தரவிட்டுள்ளார்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}