சென்னை: பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட 7 பெண்களுக்கு நீதிமன்றம் அறிவித்த நிவாரண தொகையுடன், கூடுதலாக தலா 25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி வழக்கில் கடந்த ஆறு வருடங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் தீர்ப்பு கிடைத்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என குறிப்பிட்டு, சாகும் வரை அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் பாதிக்கப்பட்ட ஏழு பெண்களுக்கும் தலா 10 முதல் 15 லட்சம் வரை என மொத்தம் 85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் மொத்தமாக அறிவித்த 85 லட்சம் நிவாரண தொகையுடன் கூடுதலாக தலா 25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் நீதிமன்றம் விசாரணைக் குழு ஒத்துழைப்பும் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.
அத்தகைய நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது.அந்த வகையில் நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகிய ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் முதல்வர் மு.க உத்தரவிட்டுள்ளார்.
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
Gold price:அதிரடியாக குறைந்தது தங்கம் விலை...இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,520 குறைவு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்
பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
{{comments.comment}}