பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!

May 15, 2025,05:05 PM IST

சென்னை: பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட 7 பெண்களுக்கு நீதிமன்றம் அறிவித்த நிவாரண தொகையுடன், கூடுதலாக தலா 25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி வழக்கில் கடந்த ஆறு வருடங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் தீர்ப்பு கிடைத்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என குறிப்பிட்டு, சாகும் வரை அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் அதிரடி  உத்தரவு பிறப்பித்தது. மேலும்  பாதிக்கப்பட்ட ஏழு பெண்களுக்கும் தலா 10 முதல் 15 லட்சம் வரை என மொத்தம் 85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.




இந்த நிலையில் பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் மொத்தமாக அறிவித்த 85 லட்சம் நிவாரண தொகையுடன் கூடுதலாக தலா 25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் நீதிமன்றம் விசாரணைக் குழு ஒத்துழைப்பும் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.

அத்தகைய நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது.அந்த வகையில் நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகிய ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் முதல்வர் மு.க உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

news

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்

news

Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு

news

வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

news

வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!

news

சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்