சென்னை: நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இன்று நடந்த அத்துமீறல் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்குத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக தெரிவித்துள்ள கருத்து:

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த வரலாறு காணாத பாதுகாப்பு குளறுபடியால் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தாமதம் இல்லாமல் இதுதொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாரோ அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும். ஜனநாயகத்தின் தூணான நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}