சென்னை: நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இன்று நடந்த அத்துமீறல் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்குத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக தெரிவித்துள்ள கருத்து:
நாடாளுமன்றத்தில் இன்று நடந்த வரலாறு காணாத பாதுகாப்பு குளறுபடியால் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தாமதம் இல்லாமல் இதுதொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாரோ அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும். ஜனநாயகத்தின் தூணான நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. நாளை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்!
Operation Sindoor.. பாகிஸ்தானை எப்படி தாக்கினோம்.. விளக்கிய பெண் அதிகாரிகள்.. யார் இவர்கள்?
4 years of DMK Govt: திராவிட மாடல் ஆட்சியே விடியல் தரும் ஆட்சி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்திய தாக்குதலில்.. எங்க குடும்பத்துல 10 பேரு செத்துப் போயிட்டாங்க.. மசூத் அஸார் அலறல்!
மங்கள மீனாட்சிக்கு மதுரையில் திருக்கல்யாணம்.. பெண் குழந்தைகளுக்கு வைக்க 31 தமிழ்ப் பெயர்கள்!
ராணுவத்திற்கு ராயல் சல்யூட் அடித்த விஜய்.. இதுதான் இந்தியாவின் முகம்.. பாராட்டிய சிவகார்த்திகேயன்!
இந்தியாவின் 25 நிமிடத் தாக்குதல்.. கொல்லப்பட்ட 70 பயங்கரவாதிகள்.. திரில் நடவடிக்கை!
IPL வரலாற்றில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை.. 3வது முறையாக.. 500+ ரன்களைக் கடந்து புதிய வரலாறு!
சென்னை சூப்பர் கிங்ஸுடன் இன்று மோதல்.. பெரும் வெற்றியைப் பெறும் மும்முரத்தில் KKR!