சென்னை: நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இன்று நடந்த அத்துமீறல் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்குத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக தெரிவித்துள்ள கருத்து:
நாடாளுமன்றத்தில் இன்று நடந்த வரலாறு காணாத பாதுகாப்பு குளறுபடியால் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தாமதம் இல்லாமல் இதுதொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாரோ அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும். ஜனநாயகத்தின் தூணான நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!
முக ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது... நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டார்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
{{comments.comment}}