"நாடாளுமன்றத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு குளறுபடி".. கடும் நடவடிக்கை தேவை.. முதல்வர் ஸ்டாலின்

Dec 13, 2023,06:12 PM IST

சென்னை: நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இன்று நடந்த அத்துமீறல் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்குத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக தெரிவித்துள்ள கருத்து:




நாடாளுமன்றத்தில் இன்று நடந்த வரலாறு காணாத பாதுகாப்பு குளறுபடியால் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.


தாமதம் இல்லாமல் இதுதொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாரோ அவர்களை கடுமையாக  தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.


இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும். ஜனநாயகத்தின் தூணான நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்

news

முதல்வர் விஜய், உதயநிதி உட்பட 55 எம்எல்ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு

news

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான் களம் காண்கிறாரா?

news

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு!

news

தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்: முடிவுக்கு வந்த சகாப்தம்

news

இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்