சென்னை: முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில், நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக்கூடாது என அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
2025 -26 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் இம்மாத இறுதியில் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு துறை ரீதியாக பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதே சமயத்தில் மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக முதல்வர்
மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி,நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. தமிழகம் அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ச்சியடைய வேண்டுமென்ற நோக்கில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் முக்கிய இலக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளி துறையில் பத்தாயிரம் கோடி
முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் குறைந்தபட்சம் 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் விண்வெளித் துறையில் தகுதியானவர்களை ஊக்குவித்தல், 300 கோடிக்கு மேலான முதலீடுகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டங்கள் அனைத்தையும் அமைச்சரவையில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஒப்புதல் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி மற்றும் துரைமுருகன் ஆகியோர் பேச்சுக்கு ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. இந்த நிலையில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்பட கூடாது என அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
{{comments.comment}}