சென்னை: முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில், நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக்கூடாது என அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
2025 -26 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் இம்மாத இறுதியில் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு துறை ரீதியாக பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதே சமயத்தில் மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக முதல்வர்
மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி,நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. தமிழகம் அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ச்சியடைய வேண்டுமென்ற நோக்கில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் முக்கிய இலக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளி துறையில் பத்தாயிரம் கோடி
முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் குறைந்தபட்சம் 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் விண்வெளித் துறையில் தகுதியானவர்களை ஊக்குவித்தல், 300 கோடிக்கு மேலான முதலீடுகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டங்கள் அனைத்தையும் அமைச்சரவையில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஒப்புதல் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி மற்றும் துரைமுருகன் ஆகியோர் பேச்சுக்கு ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. இந்த நிலையில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்பட கூடாது என அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வயலா எலுமிச்சை.. எங்கள் ஊரின் பசுமை பொக்கிஷம்!
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
தேசத் தந்தை தேசத்தின் விந்தை .. நற்குணம்விற்ற நாட்டுச் சந்தை.. அகிம்சை தலைவன்!
சக்தி வாய்ந்த அகிம்சை போராளி.....!
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்...யார் அவர்கள்? பரபரக்கும் அரசியல் களம்
விண்ணமுதம்!
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
என்ன சொல்ல...!
{{comments.comment}}