திருவள்ளுவர் தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நான்கு வாக்குறுதிகள்!

Jan 16, 2026,10:21 AM IST

சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி நான்கு முக்கிய வாக்குறுதிகளை வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள எக்ஸ் தள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:




வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர்நாளில், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்.


அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் - வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்!


அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு-திருவள்ளுவர்

சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல்.

வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள்.

இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்.

தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்.

இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி என்று முதல்வர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யின் பொங்கல் வாழ்த்து: தமிழகத்தில் மீண்டும் வெடித்த தமிழ்ப் புத்தாண்டு விவாதம்

news

மாலன் போற்றும் மாட்டுப் பொங்கல் .. மனிதனும் மாடும் கலந்து களிக்கும்.. கூட்டுப்பொங்கல்!

news

அறிவு சுரங்கத்தை அகிலத்திற்கு அளித்த ஆதவன்.. திருவள்ளுவர்!

news

தூக்கம் - தியான நிலை (SLEEP is the Best Meditation)

news

கொம்புகள் எல்லாம் வண்ணமாகுமே.. கூரான கொம்பில் சலங்கை ஆடுமே!

news

திருவள்ளுவர் தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நான்கு வாக்குறுதிகள்!

news

திருவள்ளுவர் தினம்...அனைவரும் திருக்குறள் படிங்க...பிரதமர் மோடி வேண்டுகோள்

news

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்... 6.2 ரிக்டர் அளவில் பதிவு

news

ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்