நிதி ஆயோக் கூட்டத்தில்.. பங்கேற்க இன்று டெல்லிக்கு புறப்படுகிறார்.. முதல்வர் மு.க ஸ்டாலின்..!

May 23, 2025,10:31 AM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.



கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்கொள்ள மத்திய திட்ட குழு மாற்றி அமைக்கப்பட்டு,நிதி ஆயோக் அமைப்பாக  செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அரசின் திட்டங்கள், கூட்டாட்சியை வளர்ப்பது, சரியான திட்டமிடல், தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக ஒவ்வொரு வருடமும் இந்த நிதி ஆயோக் கூட்டம்  நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர்கள் பங்கேற்பார்கள். 


அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான  நிதி ஆயோக் கூட்டம் நாளை, மே 24ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 




இந்த நிலையில்  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலை 9:30 மணி அளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்படுகிறார். முதல்வர் டெல்லி வந்தடைந்ததும் அவரை வரவேற்க திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், ஏ.வ.வேலு உள்ளிட்டோர் முன்கூட்டியே டெல்லிக்கு சென்று சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனையடுத்து முதல்வர் 

மு.க பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு  வலியுறுத்த  இருக்கிறார். பிறகு இன்று இரவு டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் தங்குகிறார்.


இதனையடுத்து நாளை நடைபெறும் நிதி ஆயாக் நிர்வாகக் குழு கூட்டத்தில் முதல் மு க ஸ்டாலின் பங்கே இருக்கிறார் பிறகு அன்று மாலை மீண்டும் சென்னை திரும்புகிறார்.

முன்னதாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த நிதி ஆயோக் கூட்டத்தில், ஆந்திரா பீகார் போன்ற மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டதாகவும், தமிழ்நாட்டிற்கான நிதியை ஒதுக்கவில்லை எனவும் முதல்வர் மு க ஸ்டாலின் கூட்டத்தை புறக்கணித்தார் என்பது நினைவிருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்