திருவண்ணாமலை பாறை சரிவு சோகம்.. 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Dec 03, 2024,10:46 AM IST

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கிய உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தையே உலுக்கி விட்டது. இதன் தாக்கத்தால் திருவண்ணாமலையில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக வ உ சி நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. அதாவது அண்ணாமலையார் கோவிலின் தீபமேற்றும் பகுதியில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தது. இதில் மலை அடிவாரத்தில் இருந்த இரண்டு வீடுகள் மீது 40 டன் எடை கொண்ட பாறைகள் விழுந்து, வீடுகளை மண் குவியலால் மூடியது.

இந்த இடிப்பாட்டிற்குள் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமார், அவரது மனைவி மீனா, இரண்டு குழந்தைகள் மற்றும்  அருகில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் என மொத்தம் ஏழு பேர் மண்ணில் புதையுண்டனர். இதனையடுத்து பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிகளுக்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இடைவிடாத  மழையால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து போராடிய மீட்பு குழுவினர் நேற்று இரவு வாக்கில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் 4 பேரின் உடல்கள் முழுமையாக கிடைத்த நிலையில் மற்ற மூவரின் உடல்கள் சிதைந்த நிலையில் பாதியாகவே கிடைத்ததாக கூறப்படுகிறது. 



இதையடுத்து முழுமையாக அவர்களது உடல் பாகங்களை மீட்க வேண்டும் என்று குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் அந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன. 

இதனிடையே சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மண்ணில் புதையுண்டவர்களை உயிருடன் மீட்க போராடினோம். ஆனால் மழை குறுக்கிட்டதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது‌. இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர் என கூறினார்.

திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்