சென்னை: நெல்லை தொகுதியில் தோற்றால் திமுக நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என்று நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதானல் அனைத்து கட்சிகளும் தத்தமது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், திமுக தரப்பில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உடன் பிறப்பே வா என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு தொகுதியாக திமுக நிர்வாகிகளுடன் சந்தித்து பேசி வருகிறார்.

இதுவரைக்கும் 33 நாட்களில் 73 சட்டசபைத் தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நேரடியாக ஆலோசனை நடத்தி முடித்திருக்கிறார். இந்த கூட்டத்தின் போது அந்தந்த தொகுதிகளின் நிலவரம் என்ன?. அரசு திட்டங்கள் அவர்களுக்கு சேர்கின்றதா? இல்லையா? உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், நெல்லை சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
அப்போது, 2026 நெல்லை தொகுதியில் தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைவரது பதவிகளும் பறிக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
உங்க சிந்தனையை மாத்தி ஒரு தடவை ஆட்சியை என்கிட்ட கொடுத்துதான் பாருங்களேன்: சீமான் ஆவேசம்!
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் அறிவிப்பு
Thank you People of India... ஏவுகணையில் எழுதி.. இஸ்ரேலைத் தாக்கி.. ஈரான் அதிரடி!
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
புதுச்சேரியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு வாளி சின்னம் ஒதுக்கீடு
புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டி...முடிவை அறிவித்த கிருஷ்ணசாமி
தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழு விபரம்!
Petrol - Diesel: கூடுதல் கலால் வரியை அதிரடியாக குறைத்தது மத்திய அரசு!
{{comments.comment}}