டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு..23ஆம் தேதி செல்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!

May 20, 2025,06:50 PM IST

சென்னை: டெல்லியில் வரும் மே 24ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாகவும், இதற்காக 23ஆம் தேதி இரவு டெல்லி இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.



நிதி ஆயோக் என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். அதாவது பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு, பாஜக தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு நிதி ஆயோக் குழுவை உருவாக்கியது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.




இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் வரும் மே 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்  நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. 


இந்த நிலையில் டெல்லியில் வரும் மே 24ஆம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக மே 23ஆம் தேதி இரவு முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார். 


முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் ஆந்திரா, பிஹார் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகத்திற்கு 

நிதி ஒதுக்கவில்லை என முதல்வர் மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Power Tariff: வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை.. கட்டண சலுகையும் தொடரும்.. அமைச்சர் சிவசங்கர்

news

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு..23ஆம் தேதி செல்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!

news

ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை கிடையாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பு மனவலி தருகிறது.. சீமான்

news

இந்தியாவில் மீண்டும் கொரோனா... தமிழ்நாட்டில் 34 பேருக்கு தொற்று உறுதி: மத்திய அரசு அறிவிப்பு!

news

என் கணவரை விட்டுப் பிரிய மூன்றாவது நபரே காரணம்.. ஆர்த்தி ரவி பரபரப்பு குற்றச்சாட்டு!

news

தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ஆர்பிஐ புதாக 9 விதிமுறைகள் அறிவிப்பு!

news

அரபிக்கடலில் உருவாகிறது சக்தி புயல்.. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கணிப்பு..!

news

நீட் தேர்வால் 24வது மாணவர் உயிரிழப்பு... டம்மி அப்பா கூறியது அத்தனையும் பொய் : எடப்பாடி பழனிச்சாமி!

news

கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி... சாத்தான்குளம் சம்பவமே சாட்சி... அமைச்சர் சேகர்பாபு!

அதிகம் பார்க்கும் செய்திகள்