சென்னை: டெல்லியில் வரும் மே 24ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாகவும், இதற்காக 23ஆம் தேதி இரவு டெல்லி இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிதி ஆயோக் என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். அதாவது பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு, பாஜக தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு நிதி ஆயோக் குழுவை உருவாக்கியது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.

இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் வரும் மே 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் டெல்லியில் வரும் மே 24ஆம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக மே 23ஆம் தேதி இரவு முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் ஆந்திரா, பிஹார் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகத்திற்கு
நிதி ஒதுக்கவில்லை என முதல்வர் மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}