சென்னை: டெல்லியில் வரும் மே 24ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாகவும், இதற்காக 23ஆம் தேதி இரவு டெல்லி இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிதி ஆயோக் என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். அதாவது பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு, பாஜக தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு நிதி ஆயோக் குழுவை உருவாக்கியது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.

இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் வரும் மே 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் டெல்லியில் வரும் மே 24ஆம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக மே 23ஆம் தேதி இரவு முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் ஆந்திரா, பிஹார் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகத்திற்கு
நிதி ஒதுக்கவில்லை என முதல்வர் மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}