தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?

Dec 08, 2025,11:20 AM IST

- சுமதி சிவக்குமார்


தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. என்று ஒரு சினிமாப் பாடல் உண்டு. இதில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.. ஆனால் தென்னையைப் பற்றி சற்று ஆழ்ந்து பார்த்தால் அத்தனை நல்ல விஷயங்கள் அதில் உள்ளன. அதைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.


தென்னை மரம் நீண்ட கால பலன் கொடுக்கும் மரம் ஆகும். தென்னை மரத்தின் விதைக்கன்று 2அடி அல்லது 3 அடி உயரத்தில் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் 500 முதல் 600 கன்றுகள் நடலாம். வீடு என்றால், வீட்டின் தோட்டத்தில் இரண்டு அல்லது மூன்று கன்றுகள் நடலாம்.


தென்னை சுமார் 5 முதல் 6 வருடங்கள் வரை வளர்ந்து பூ பூக்கும். குட்டை மரங்கள் 2 வருடத்திலேயே பூப்பூக்கும்.  தென்னம்பாலை பூத்த பிறகு அதை தெய்வமாக எண்ணி வழிபாடு செய்வர். பூ பூத்த பிறகு 6 அல்லது 7 மாதங்களில் காய் பிடித்து இளநீராக கிடைக்கும். சுமார் ஒரு மரத்தில் 70 முதல் 100 காய்கள் கிடைக்கும். மரத்தின் ஊட்டச்சத்து பொருத்து அமையும்.


கொப்பரை தேங்காய்




தேங்காய் முற்றி காய்ந்த பிறகு அது கொப்பரை தேங்காய் எனப்படும். இதன் ஓடுகளை நீக்கி வெய்யிலில் உலர்த்தி செக்கில் ஆட்டி எண்ணெய் + புண்ணாக்கு தனியாகப் பிழிந்து எடுப்பர். இது உடல் சூட்டை தணிக்கும். உஷ்ணத்தை குறைக்கும். எனவே கை கால்களில் தேய்த்து வந்தால் நல்லது. இரவில் படுக்கும் முன் உள்ளங்காலில் தேய்த்தால் உடல்வலி குறையும்.


கேரளாவில் அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளன. மலையோர மாநிலம் என்பதால் அதிக தென்னை மகசூல் கிடைக்கும். மக்கள் சமையல் செய்ய கூட இங்கு தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துவர். தேங்காய் சமையலுக்கு மிக முக்கியமானதும் கூட. அவியல் கூட்டு மோர் குழம்பு இவற்றை தாளித்தால் சுவை அபாரமாக இருக்கும்.


தேங்காய் நார் கயிறு திரிக்கவும் காலடி தயாரிக்கவும் பயன்படுகிறது. தென்னை மட்டையை முடிந்து நம் தமிழர்கள் அடுப்பெரிக்கவும் பலவற்றிற்கும் பயன்படுத்தினார்கள்.


ஆயுட்காலம்


தென்னை மரம் நாட்டு மரம் சுமார் 80 முதல் 110 வருடங்கள் காய்க்கும். குட்டை மரம் 40 முதல் 50 வருடங்கள் காய்க்கும்.


நமது முன்னோர்கள் நட்டு வைத்த மரங்களின் பயனை நாம் அனுபவிக்கிறோம். அதேபோல நாம் நடும் மரங்கள் நம் வாரிசுகள் அனுபவிக்க வீட்டிற்கு ஒரு தென்னை நடுவோம்.


(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்