சென்னை: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான தமிழக அரசு அனுப்பிய திட்ட அறிக்கை நிராகரிக்கப்படவில்லை என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் தொடர்பாக கூடுதல் விளக்கம் கேட்டு மத்திய அரசு கோப்புகளை அனுப்பி உள்ளது. திட்டம் நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கோவை, மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அளித்த விளக்கத்தில், திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை. கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் தொடரும் என்றும், இது தொடர்பான முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு இருந்த மக்கள் தொகைக்கும் தற்போதுள்ள மக்கள் தொகை குறித்து தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ள கோப்புகுளை அனுப்பியுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை
இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்
ராஜ்ய சபா எம்பி ஆகிறார் நிதின் நபீன்: பாஜகவின் இளம் தேசிய தலைவர் பீகாரிலிருந்து தேர்வு
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை
இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?
திமுக - காங்கிரஸ் கூட்டணி: இழுபறிக்கு இடையில் இன்று முக்கிய அறிவிப்பு?
தடையினை உடைத்திடு
{{comments.comment}}