வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 3. லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அவர் பிரமாண்ட வெற்றியைப் பெறுகிறார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஒருவர் ஒரு தொகுதியில் தான் பதவி வகிக்க முடியும் என்ற அடிப்படையில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவித்தனர்.

நவம்பர் 13ஆம் தேதி வயநாடு மக்களவை இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் , கம்யூனிஸ்ட் கூட்டணி சார்பில் சத்யன் மெகோரி மற்றும் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 17 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் களம் கண்டனர்.
வயநாடு தொகுதியில் இன்று காலை 8:00 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அவர் 4,81,550 வாக்குகளைப் பெற்று கிட்டத்தட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 2வது இடத்தில் சிபிஐ வேட்பாளர் உள்ளார். 3வது இடத்தில்தான் பாஜக வேட்பாளர் இருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே அரசியல் செய்து வந்தவரான பிரியங்கா காந்தி அங்கு ஒரு தேர்தலில் கூட போட்டியிட்டதில்லை. தனது குடும்பத்தினருக்காகவும், கட்சியினருக்காகவும் தீவிரப் பிரச்சாரம் மட்டுமே செய்துள்ளார். முதல் முறையாக அவர் தேர்தலில் இப்போதுதான் போட்டியிட்டார். முதல் தேர்தலிலேயே பிரமாண்ட வெற்றியை அவர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு
ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்
எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி
அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
பூ அல்ல பாவை.. சிவப்பில் மலரும் மனிதம்!
ஒரு மழை நாளிலிருந்து!
உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை
என் தனிமையின் பேரழகு
{{comments.comment}}