வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 3. லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அவர் பிரமாண்ட வெற்றியைப் பெறுகிறார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஒருவர் ஒரு தொகுதியில் தான் பதவி வகிக்க முடியும் என்ற அடிப்படையில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவித்தனர்.

நவம்பர் 13ஆம் தேதி வயநாடு மக்களவை இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் , கம்யூனிஸ்ட் கூட்டணி சார்பில் சத்யன் மெகோரி மற்றும் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 17 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் களம் கண்டனர்.
வயநாடு தொகுதியில் இன்று காலை 8:00 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அவர் 4,81,550 வாக்குகளைப் பெற்று கிட்டத்தட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 2வது இடத்தில் சிபிஐ வேட்பாளர் உள்ளார். 3வது இடத்தில்தான் பாஜக வேட்பாளர் இருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே அரசியல் செய்து வந்தவரான பிரியங்கா காந்தி அங்கு ஒரு தேர்தலில் கூட போட்டியிட்டதில்லை. தனது குடும்பத்தினருக்காகவும், கட்சியினருக்காகவும் தீவிரப் பிரச்சாரம் மட்டுமே செய்துள்ளார். முதல் முறையாக அவர் தேர்தலில் இப்போதுதான் போட்டியிட்டார். முதல் தேர்தலிலேயே பிரமாண்ட வெற்றியை அவர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
{{comments.comment}}