Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

Nov 23, 2024,05:38 PM IST

வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 3. லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள்  வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அவர் பிரமாண்ட வெற்றியைப்  பெறுகிறார்.


லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ரேபரேலி மற்றும் வயநாடு  தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஒருவர் ஒரு தொகுதியில் தான் பதவி வகிக்க முடியும் என்ற அடிப்படையில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனைத்  தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவித்தனர்.




நவம்பர் 13ஆம் தேதி வயநாடு மக்களவை இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.‌ இதில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் , கம்யூனிஸ்ட் கூட்டணி சார்பில் சத்யன் மெகோரி மற்றும் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 17 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் களம் கண்டனர். 


வயநாடு தொகுதியில் இன்று காலை 8:00 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அவர் 4,81,550 வாக்குகளைப் பெற்று கிட்டத்தட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  முன்னிலையில் உள்ளார். 2வது இடத்தில் சிபிஐ வேட்பாளர் உள்ளார். 3வது இடத்தில்தான் பாஜக வேட்பாளர் இருக்கிறார்.


உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே அரசியல் செய்து வந்தவரான பிரியங்கா காந்தி அங்கு ஒரு தேர்தலில் கூட போட்டியிட்டதில்லை. தனது குடும்பத்தினருக்காகவும், கட்சியினருக்காகவும் தீவிரப் பிரச்சாரம் மட்டுமே செய்துள்ளார். முதல் முறையாக அவர்  தேர்தலில் இப்போதுதான் போட்டியிட்டார். முதல் தேர்தலிலேயே பிரமாண்ட வெற்றியை அவர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்