சென்னை: ஏஆர் ரஹ்மான் மீது தொடரப்பட்ட பதிப்புரிமை வழக்கில் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் இசையமைத்தவர் ஏஆர் ரஹ்மான். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு ரிலிஸ் ஆனது. இந்த படத்தின் கதை கல்கி எழுதிய வரலாற்று நாவலான பென்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதன் இரண்டாம் பாகம் 2023 ம் ஆண்டு ரிலிஸ் ஆனது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உள்ள வீர ராஜா வீரா பாடல் தனது தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் இயற்றிய சிவா ஸ்துதி என்ற பாடல் என்று இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் கடந்த 2023ம் ஆண்டு ரஹ்மானுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பொன்னியின் செல்வன் படத்தின் வீரா ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதன் காரணமாக ரூ. 2 கோடி தொகையை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலவலகத்தில் செலுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
Are you Okay?.. உண்மையான அக்கறையுடன் விசாரிப்பது அம்மா மட்டுமே!
உலக ஆரோக்கிய தினம்
என் இதயம் முழுமையும் நிரம்பியுள்ளாய்.. அவளின் (ல்) அவன்! (11)
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
meenakshi thirukalyanam 2026 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் 2026 கோலாகலம்
தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்
புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது
{{comments.comment}}