சென்னை: ஏஆர் ரஹ்மான் மீது தொடரப்பட்ட பதிப்புரிமை வழக்கில் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் இசையமைத்தவர் ஏஆர் ரஹ்மான். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு ரிலிஸ் ஆனது. இந்த படத்தின் கதை கல்கி எழுதிய வரலாற்று நாவலான பென்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதன் இரண்டாம் பாகம் 2023 ம் ஆண்டு ரிலிஸ் ஆனது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உள்ள வீர ராஜா வீரா பாடல் தனது தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் இயற்றிய சிவா ஸ்துதி என்ற பாடல் என்று இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் கடந்த 2023ம் ஆண்டு ரஹ்மானுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பொன்னியின் செல்வன் படத்தின் வீரா ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதன் காரணமாக ரூ. 2 கோடி தொகையை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலவலகத்தில் செலுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மூச்சுள்ளவரை முயன்றிடு!
எனை ஆள்பவனே
கோகுலத்து கண்ணா.. கோபியரின் மன்னா!
கம்சனை கொன்ற கள்ளழகா.... சுதர்சனம் ஏந்திய சுந்தரனே.....!
அழகே அழகாய் அமைந்த அழகோவியமோ நீ!
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
ஐகோர்டில் வழக்காடு மொழியாக தமிழ்...முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு
கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிரான வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி
{{comments.comment}}