ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

Apr 25, 2025,05:09 PM IST

சென்னை: ஏஆர் ரஹ்மான் மீது தொடரப்பட்ட பதிப்புரிமை வழக்கில் ரூ.2 கோடி செலுத்த டெல்லி  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் இசையமைத்தவர் ஏஆர் ரஹ்மான். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு ரிலிஸ் ஆனது. இந்த படத்தின் கதை கல்கி எழுதிய வரலாற்று நாவலான பென்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதன் இரண்டாம் பாகம் 2023 ம் ஆண்டு ரிலிஸ் ஆனது. 




இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உள்ள வீர ராஜா வீரா பாடல் தனது தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் இயற்றிய சிவா ஸ்துதி என்ற பாடல்  என்று இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் கடந்த 2023ம் ஆண்டு ரஹ்மானுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பொன்னியின் செல்வன் படத்தின் வீரா ராஜா வீரா  பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.  இதன் காரணமாக ரூ. 2 கோடி தொகையை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலவலகத்தில் செலுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு

news

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!

news

தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!

news

பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்

news

மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

news

தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!

news

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!

news

தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

news

உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்