இந்தியாவில் மீண்டும் கொரோனா... தமிழ்நாட்டில் 34 பேருக்கு தொற்று உறுதி: மத்திய அரசு அறிவிப்பு!

May 20, 2025,06:50 PM IST

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று  பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது கொரோனா வைரஸ். முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் கோர தாண்டவத்தில்  பல உயிர்கள் பறி போகின.  ஊரங்கு உத்தரவுகள், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 


இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதற்கு அடுத்த படியாக தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது.




இந்தியாவில் மட்டும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு லேசான பாதிப்பு தான் இருப்பதாகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் மட்டும் 34 பேருக்கம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் 69 பேருக்கும், மஹாராஷ்டிராவில் 44 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்