டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது கொரோனா வைரஸ். முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் கோர தாண்டவத்தில் பல உயிர்கள் பறி போகின. ஊரங்கு உத்தரவுகள், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதற்கு அடுத்த படியாக தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் மட்டும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு லேசான பாதிப்பு தான் இருப்பதாகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 34 பேருக்கம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் 69 பேருக்கும், மஹாராஷ்டிராவில் 44 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
தங்கம் விலை நேற்று ஏறிய நிலையில் இன்று குறைந்தது... அதுவும் சவரனுக்கு ரூ.800 குறைவு!
கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேங்க் போக வேண்டிய வேலை இருக்கா.. தயவு செய்து 5ம் தேதி போகாதீங்க... இந்த மாநிலங்களில் லீவு!
கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 04, 2025... இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் ராசிகள்
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
{{comments.comment}}