டெல்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, நாட்டில் 4,026 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் ஒருவரும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஓமைக்ரான் வகை வைரஸின் துணை வகைகளான LF.7, XFG, JN.1 மற்றும் NB.1.8.1 காரணமாக இந்த பாதிப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம், நோயின் தீவிரம் குறைவாக இருப்பதால், பெரும்பாலானோர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் 80 வயது முதியவர் நிமோனியா மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் கரோனரி தமனி நோய் இருந்தன. தற்போது அந்த மாநிலத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 70 வயது பெண் மற்றும் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்த 73 வயது பெண் ஆகியோர் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தில் சுமார் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் ஜனவரி 1 முதல் 483 கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதில் 477 பாதிப்புகள் மே மாதத்தில் மட்டும் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் டைப் 2 நீரிழிவு மற்றும் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 69 வயது பெண் வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். மேற்கு வங்கத்தில் கடுமையான கரோனரி சிண்ட்ரோம், செப்டிக் ஷாக் மற்றும் கடுமையான சிறுநீரக பாதிப்பு காரணமாக 43 வயது பெண் உயிரிழந்தார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ராஜீவ் பெஹ்ல் கூறுகையில், மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசைமுறை ஆய்வில், தற்போது பாதிப்பு அதிகரிக்க காரணமான வைரஸ்கள் தீவிரமானவை அல்ல என்றும், அவை ஓமைக்ரானின் துணை வகைகளே என்றும் தெரிவித்தார். LF.7, XFG, JN.1 போன்ற வைரஸ்கள் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளில் காணப்படுகின்றன.
மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசைமுறை ஆய்வில், தற்போது பாதிப்பு அதிகரிக்க காரணமான வைரஸ்கள் தீவிரமானவை அல்ல என்றும், அவை ஓமைக்ரானின் துணை வகைகளே என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}