சிபிஐக்கு நாகை, திருப்பூர்.. சிபிஎம்முக்கு மதுரை, திண்டுக்கல்.. தொகுதிகளை ஒதுக்கியது திமுக!

Mar 12, 2024,07:30 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் (தனி) தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் முதல் ஆளாக தொகுதி பங்கீடு  தொடர்பான பேச்சுவார்த்தையை முடித்து விட்டது. தற்போது தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக ஏற்கனவே சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்திருந்தது. இரண்டு தொகுதிகள் என எண்ணிக்கையில் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிக்கு எந்த தொகுதி என்பதில் இறுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டியிட்ட கோவை தொகுதி இந்த முறை திமுகவுக்கு போய் விட்டது. அதற்கு் பதில், திமுக வென்ற திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட்க்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  இறுதியாக இன்று காலை முதலமைச்சர் மு க ஸ்டாலினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நானும் சேர்ந்து ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் ஒன்று மதுரை, இரண்டாவது திண்டுக்கல் என்கிற இரண்டு தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 


நிச்சயமாக இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பது மட்டுமல்ல தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்த அணி மகத்தான வெற்றி பெறும் என்ற  நம்பிக்கையோடு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.


இந்திய கம்யூனிஸ்ட்




இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் (தனி) தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த தேர்தலிலும் இதே தொகுதிகளில் தான் கம்யூனிஸ்ட் போட்டியிட்டது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து

news

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை உலுக்கும் 1,000 கி.மீ நீள மழை மேகக்கூட்டம்

news

மேற்காசிய வான்வெளியைத் தவிருங்கள்.. விமான நிறுவனங்களுக்கு DGCA அறிவுரை

news

ரூ. 10,000 இழந்த வாடிக்கையாளர்.. ரூ. 3.28 லட்சம் கொடுங்க.. வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் சூடு!

news

ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறள்கள்.. அசத்திய சென்னை மாநகராட்சி மாணவர்கள்!

news

எதிர்காலத்தை வழிநடத்துதலும், சவால்களும்.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (7)

news

வயலாநல்லூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு

news

செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!

news

நிறை குடம்

அதிகம் பார்க்கும் செய்திகள்