சிபிஐக்கு நாகை, திருப்பூர்.. சிபிஎம்முக்கு மதுரை, திண்டுக்கல்.. தொகுதிகளை ஒதுக்கியது திமுக!

Mar 12, 2024,07:30 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் (தனி) தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் முதல் ஆளாக தொகுதி பங்கீடு  தொடர்பான பேச்சுவார்த்தையை முடித்து விட்டது. தற்போது தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக ஏற்கனவே சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்திருந்தது. இரண்டு தொகுதிகள் என எண்ணிக்கையில் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிக்கு எந்த தொகுதி என்பதில் இறுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டியிட்ட கோவை தொகுதி இந்த முறை திமுகவுக்கு போய் விட்டது. அதற்கு் பதில், திமுக வென்ற திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட்க்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  இறுதியாக இன்று காலை முதலமைச்சர் மு க ஸ்டாலினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நானும் சேர்ந்து ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் ஒன்று மதுரை, இரண்டாவது திண்டுக்கல் என்கிற இரண்டு தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 


நிச்சயமாக இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பது மட்டுமல்ல தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்த அணி மகத்தான வெற்றி பெறும் என்ற  நம்பிக்கையோடு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.


இந்திய கம்யூனிஸ்ட்




இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் (தனி) தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த தேர்தலிலும் இதே தொகுதிகளில் தான் கம்யூனிஸ்ட் போட்டியிட்டது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

news

திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்

news

Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?

news

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு

news

ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

news

தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்