Cricket: ரோஹித் சர்மாவை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் அமித் மிஸ்ரா!

Sep 04, 2025,02:39 PM IST

டெல்லி: இந்திய அணியின் அனுபவ வீரரான அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 25 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வந்த அவர், தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார். 


மிஸ்ரா இந்திய அணிக்காக 22 டெஸ்ட் போட்டிகள், 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 T20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். காயம் காரணமாகவும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கிரிக்கெட் தனக்கு எல்லாவற்றையும் கொடுத்ததாகவும், தற்போது தான் கிரிக்கெட்டுக்கு திருப்பி செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் பயிற்சியாளராக வாய்ப்பு உள்ளது என சொல்லப்படுகிறது.


அமித் மிஸ்ரா 2003 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் முதன்முதலில் இந்திய அணிக்காக விளையாடினார். ஆனால், டெஸ்ட் போட்டியில் விளையாட 2008 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2013 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜவஹல் ஸ்ரீநாத்தின் சாதனையை சமன் செய்தார். மிஸ்ரா கடைசியாக 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார்.




அவர் கடைசியாக விளையாடிய போட்டி IPL 2024 ஆகும். இதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 1 விக்கெட்டை வீழ்த்தி 20 ரன்கள் கொடுத்தார். IPL போட்டிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் ஆவார். அவர் 161 போட்டிகளில் விளையாடி 174 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். மேலும், IPL வரலாற்றில் மூன்று ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையும் படைத்துள்ளார். 


ஓய்வு குறித்து மிஸ்ரா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று, 25 வருடங்களுக்குப் பிறகு, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். இந்த விளையாட்டு எனக்கு முதல் காதல், என் ஆசிரியர் மற்றும் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஆதாரம். இந்த பயணம் எண்ணற்ற உணர்ச்சிகள் நிறைந்தது. பெருமை, கஷ்டம், கற்றல் மற்றும் அன்பு போன்ற தருணங்கள் இதில் அடங்கும். பிசிசிஐ, ஹரியானா கிரிக்கெட் சங்கம், எனது பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள், சக வீரர்கள் மற்றும் குறிப்பாக ரசிகர்கள் ஆகியோருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 


அவர்களின் நம்பிக்கை ஒவ்வொரு அடியிலும் எனக்கு வலிமை அளித்தது. ஆரம்ப நாட்களில் இருந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் முதல் களத்தில் மறக்க முடியாத தருணங்கள் வரை, ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும் என்னை வடிவமைத்துள்ளது. எனது குடும்பத்திற்கு நன்றி. எனது அணி வீரர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு நன்றி. இந்த பயணத்தை சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்