Cricket: ரோஹித் சர்மாவை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் அமித் மிஸ்ரா!

Sep 04, 2025,02:39 PM IST

டெல்லி: இந்திய அணியின் அனுபவ வீரரான அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 25 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வந்த அவர், தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார். 


மிஸ்ரா இந்திய அணிக்காக 22 டெஸ்ட் போட்டிகள், 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 T20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். காயம் காரணமாகவும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கிரிக்கெட் தனக்கு எல்லாவற்றையும் கொடுத்ததாகவும், தற்போது தான் கிரிக்கெட்டுக்கு திருப்பி செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் பயிற்சியாளராக வாய்ப்பு உள்ளது என சொல்லப்படுகிறது.


அமித் மிஸ்ரா 2003 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் முதன்முதலில் இந்திய அணிக்காக விளையாடினார். ஆனால், டெஸ்ட் போட்டியில் விளையாட 2008 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2013 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜவஹல் ஸ்ரீநாத்தின் சாதனையை சமன் செய்தார். மிஸ்ரா கடைசியாக 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார்.




அவர் கடைசியாக விளையாடிய போட்டி IPL 2024 ஆகும். இதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 1 விக்கெட்டை வீழ்த்தி 20 ரன்கள் கொடுத்தார். IPL போட்டிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் ஆவார். அவர் 161 போட்டிகளில் விளையாடி 174 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். மேலும், IPL வரலாற்றில் மூன்று ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையும் படைத்துள்ளார். 


ஓய்வு குறித்து மிஸ்ரா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று, 25 வருடங்களுக்குப் பிறகு, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். இந்த விளையாட்டு எனக்கு முதல் காதல், என் ஆசிரியர் மற்றும் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஆதாரம். இந்த பயணம் எண்ணற்ற உணர்ச்சிகள் நிறைந்தது. பெருமை, கஷ்டம், கற்றல் மற்றும் அன்பு போன்ற தருணங்கள் இதில் அடங்கும். பிசிசிஐ, ஹரியானா கிரிக்கெட் சங்கம், எனது பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள், சக வீரர்கள் மற்றும் குறிப்பாக ரசிகர்கள் ஆகியோருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 


அவர்களின் நம்பிக்கை ஒவ்வொரு அடியிலும் எனக்கு வலிமை அளித்தது. ஆரம்ப நாட்களில் இருந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் முதல் களத்தில் மறக்க முடியாத தருணங்கள் வரை, ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும் என்னை வடிவமைத்துள்ளது. எனது குடும்பத்திற்கு நன்றி. எனது அணி வீரர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு நன்றி. இந்த பயணத்தை சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!

news

Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?

news

தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!

news

விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை

news

தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!

news

தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?

news

தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்