"செல்லப் பிள்ளைகளோடு".. சேலையை வரிந்து கட்டிக் கொண்டு களம் குதித்த செல்வ புஷ்பலதா!

Oct 02, 2023,09:33 AM IST

கடலூர்: கடலூர் மாநகராட்சியின் 1வது வார்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் செல்வ புஷ்பலதா மிக மிக வித்தியாசமானவர். இப்போது அவர் செய்த காரியம் வார்டு மக்களை குஷியில் தள்ளியுள்ளது.


கடலூர் மாநகராட்சியின் 1வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் செல்வ புஷ்பலதா. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். வார்டு மக்களுக்காக வீதிகளில் இறங்கி வேலை செய்யத் தயங்காதவர். வார்டு மக்களின் அன்பையும், பாசத்தையும் பெற்றவர். எப்போது பிரச்சினை என்றாலும், என்ன பிரச்சினை என்றாலும் இவரை அணுகலாம் என்ற அளவுக்கு அத்தனை சுறுசுறுப்பானவர்.


இந்த நிலையில்,  நேற்று இவர் செய்த காரியம் வார்டு மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. வார்டில் நடைபெற்ற தூய்மை செய்யும் பணியின்போது தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளை அள்ளி சேகரித்தார். அவர்களுக்கு உத்தரவிடுவதோடு நில்லாமல் அவரே இறங்கி வேலை பார்த்ததால் தூய்மைப் பணியாளர்களும் உற்சாகமடைந்தனர். 


கொஞ்சம் கூட கவுரவம் பார்க்காமல், சேலையை வரிந்து கட்டிக் கொண்டு வெயிலில் வேர்க்க விறுவிறுக்க இறங்கி குப்பையைச் சேகரித்தார் செல்வ புஷ்பலதா. பின்னர் குப்பை வண்டியில் குப்பையை ஏற்றிக் கொண்டு அந்த வண்டியை அவரே ஓட்டியும் சென்று அனைவரையும் மூக்கின் மீது விரலை வைக்கச் செய்தார்.




இதுகுறித்து அவர் சூப்பராக ஒரு வீடியோவும் போட்டுள்ளார். அதில், சிறகுகள் வீசியே சுதந்திர ஆசையில் போகிறேன் நான் போகிறேன்....... என் வார்டில் நான் சுதந்திரமாக போகிறேன்.....  தூய்மை பணியாளர்களோடும்  வார்டு உறவுகளோடும்.... செல்லப் பிள்ளைகளோடும் சுதந்திரமாக  இன்பமாய் இன்பமாய்...... என்று கூறி மகிழ்ந்துள்ளார் செல்வ புஷ்பலதா.


இப்படி ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கவுன்சிலர் கிடைத்து விட்டால், அதுவும் இப்படி ஒரு தாய்மை உணர்வோடு கூடிய கவுன்சிலர் கிடைத்து விட்டால்.. ஒவ்வொரு வார்டின் ஏக்கமும் தீர்ந்து போய் விடும் அல்லவா.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்