சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டித்வா புயலானது, தற்போது இலங்கையின் ஓங்கி உயர்ந்த மலைகளுக்கு இடையே சிக்கி சற்று பலவீனமாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நிலப் பரப்பிலிருந்து அது மீண்டும் கடலுக்கு வரும்போது மறுபடியும் அது பலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள டித்வா புயலானது தற்போது இலங்கை கடல் பரப்பில் உள்ளது. இந்தப் புயலின் லேட்டஸ்ட் நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், டித்வா புயலானது, தற்போது இலங்கையின் ஓங்கி உயர்ந்த மலைச் சிகரங்களைத் தொட்டுக் கொண்டுள்ளது. இதன் காரணமாத அது பலவீனமடைந்துள்ளது. மீண்டும் அது கடற்பரப்புக்கு வரும்போது மறுபடியும் பலமாகக் கூடும்.
புயல் நகரத் தொடங்கியிருப்பதால் இலங்கையில் பெய்து வரும் கன மழை இன்றுடன் முடிவுக்கு வரும். அங்கு பெரும் மழைக்கு ஏற்கனவே 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெரும் நிலச்சரிவுகளையும், வெள்ளப் பெருக்கையும் இலங்கை கண்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி கடலோரப் பகுதிகள், ராமநாதபுரம் கடலோரப் பகுதிகள், நாகப்பட்டனம், தஞ்சாவூர், புதுக்கோட்டையின் கடலோரப் பகுதிகள், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. யாழ்ப்பாணம் அருகே வடக்குப் பகுதியில் புயல் நிலை கொண்டிருப்பதால் இந்தப் பகுதிகளுக்கு மழை கிடைக்கும்.
இப்போதைக்கு மிக கன மழை, அதி கன மழைக்கான வாய்ப்புகள் நமக்கு எங்குமே இல்லை.
சென்னை நிலவரம்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 29ம் தேதி நள்ளிரவுக்கு மேல் தொடங்கி 30ம் தேதி வரைதான் மழைக்கு வாய்ப்புள்ளது. அதேசமயம், இந்தப் புயலால் சென்னைக்கு அதி கன மழைக்கான வாய்ப்பும் இல்லை. கன மழை இருக்கும். அதேசமயம், மிக கன மழைக்கும் வாய்ப்புண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
{{comments.comment}}