நாகப்பட்டனம்: வங்கக் கடலில் புயல் உருவாகி வருவதால், நாகப்பட்டனம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இது இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் காரணத்தினால் அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர்,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஆகிய 10 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
எங்கள் வீட்டில் எல்லா நாளும்.. The Importance of Joint Family
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ
நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்
முடியப் போகும் வருடம்.. மறப்போம்.. மன்னிப்போம்.. I'm sorry!
சுட்டக் காத்திருக்கும் விரல்கள்.. The role of Criticism!
ஆரோக்கியத்தின் சுரங்கம் வெந்தயக் கீரை: சர்க்கரை நோய் முதல் செரிமானம் வரை தீர்வு தரும் அற்புத மூலிகை!
குருவாயூரின் சுவாசம் நாராயணீயம்!
{{comments.comment}}