Cyclone Fengal precaution.. நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

Nov 27, 2024,08:45 PM IST

நாகப்பட்டனம்: வங்கக் கடலில் புயல் உருவாகி வருவதால், நாகப்பட்டனம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.


தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 




இது இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் காரணத்தினால் அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது.


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர்,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஆகிய 10 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

வரலாற்றை அரசியலுக்காக தன் மனம் போன போக்கில் பேசுவது பிரதமருக்கு அழகல்ல: செல்வப்பெருந்தகை!

news

துரோகம் செய்தால் இது தான் நிலைமை...இபிஎஸ் பதிலடி

news

செங்கோட்டையனை நீக்க பழனிச்சாமிக்கு தகுதியில்லை : டிடிவி தினகரன்

news

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? நகை வாங்கலாமா? வேண்டாமா? இதோ நிலவரம்!

news

இபிஎஸ்.,க்கு எதிராக விரைவில் வீடியோ ஆதாரம் வெளியீடு : செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

news

என் குடும்பத்திற்காக எதையும் செய்தது கிடையாது...வீடியோ வெளியிட்ட நிதிஷ்குமார்

news

கரூர் சம்பவம் பற்றி முதல் முறையாக கருத்து சொன்ன அஜித்...என்ன சொல்லிருக்கார் பாருங்க

news

அன்பின் பரிசு.. மகாலட்சுமியின் வாழ்வு (மீண்டும் மங்கலம்.. மினி தொடர்கதை - 7)

news

வறுமை இல்லாத முதல் மாநிலம்...கேரளா அரசு அறிவிப்பு...எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்